செவ்வாய், 19 ஜூன், 2007

மெல்லிசை மன்னர் எம்.எஸ். வி - சந்திரபாபு


சந்திரபாபுவுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனிடம் கேட்டபோது ''எனக்கு இரண்டு நண்பர்கள் உண்டு ஒன்று சூரியோதயம் பார்க்காத சந்திரபாபு, மற்றொன்று சூரிய அஸ்தமனம் பார்க்காத கண்ணதாசன் 'கவலை இல்லாத மனிதன்னு' ஒரு படத்தை சந்திரபாபுவை வெச்சி கண்ணதாசன் எடுத்தாரு. அந்த படத்தை ஆரம்பிச்ச பிறகுதான் கவிஞர் கவலையுள்ள மனிதன் ஆனாரு. அந்த படத்துக்கு நான் தான் மியூசிக் போட்டேன். சந்திரபாபு எங்கிட்ட வந்து கே.எல்.சைகால் பாணில எனக்கு ஒரு பாட்டு போடுங்கன்னான். அப்படி போட்ட பாட்டுதான் ''பிறக்கும் போதும் அழுகின்றாய்'' பின்னாடி பாகிஸ்தான் போரில் பாதிக்கப்பட்ட மக்களை சண்டிகரில் சந்திக்க போனபோது, கவிஞரும் வந்திருந்தார். சந்திரபாபு தென் இந்தியர்களான அந்த மக்களிடம் −ந்த பாட்டை பாடினது −ன்றும் நெஞ்சில் நிழலாடுது. பிறகு −தே பாட்டை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் முன்னாலயும் பாடினான். யதார்த்த உலகில் நடிக்காத திறந்த புத்தகம் அவன்'' - என்றார் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன்.

நன்றி : ஆறாம் திணை

கருத்துகள் இல்லை: