வியாழன், 14 ஜூன், 2007

கிறுக்கனின் கதை - கிளியோப்பட்ரா - பாகம் 2


புட்டோலமிகள் பற்றி

அலெக்சாண்டர் என்னும் மாவீரனை யாரும் மறக்கமுடியாது...ஆம் சும்மா போரும் படையுமா இருப்பாரே
அதே பாரகிரமசாலி அலெக்சாண்டர் தான்.இவரு எகிப்தையும் விட்டுவைக்கவில்லை,எகிப்தின் அரசனாக தன்னை மகுடம் சுட்டிக்கொண்டார்.
இந்த அலெக்சாண்டருக்கு ஒரு கெட்டப்பழக்கம் இருக்கு என்னா ? எந்த நாட்டைப் புடிச்சாலும் அங்கே
அலெக்சாண்ரியா என்னும் நகரத்தை உருவாக்குவாரு !!!!
நம்ம அலெக்ஸ் மண்டயப்போடும் போது மொத்தம் 29 அலெக்சாண்ரியா நகரங்கள் இருந்தாதாகச்சொல்லப்படுகிறது.
என்ன கொடுமை அலெக்ஸ் !!!

அந்த 29 அலெக்சாண்ரியா நகரங்களிலே மிகவும் அழகானதாக கூறப்படும் நகரம் எகிப்தின் அலெக்சாண்ட்ரியாத்தானாம் !!!
பாவம் நம்ம அலெக்ஸ் போர் போருனு சுற்றி.. இதனை அனுப்பவிக்கமுடியாம 33 வயசிலே இறைவனடி சேர்ந்தார்.

என்னடா இவன் கிளியோப்பட்ராவில் ஆரம்பிச்சு அலெக்சாண்டர் கிட்டப்போறானு தோன்னுதா ,இதோ வரேன்...எல்லாம் ஒருக்காரணமாத்தான் .

நம்ம அலெக்ஸ்க்கு பலதளபதிகள் உண்டு , அதில் ஒருவன் தான் புட்டோலமி, இந்த மவராசன் தான்
நம்ம கிளியோடா மும்பாட்டனாருனு சொல்லாம்.அலெக்ஸ்க்கு பின்னால் ,எனக்கு உனக்குனு ஆரம்பித்தது ஆட்சிச்சண்டை,
சாமர்த்தியசாலி புட்டோலமி லாவகமாக எகிப்தை சுருட்டிக்கொண்டார் !!!

கருத்துகள் இல்லை: