புதன், 13 ஜூன், 2007

கிறுக்கனின் கதை - கிளியோப்பட்ரா - பாகம் 1

பதிவுக்கு காரணம் :சமிபத்தில் படித்த புத்தகம் அவ்வளவே.
குறிப்பு : இதில் எதேனும் தவறு இருப்பின் நண்பர்கள்,சான்றோர்கள் உதவீர்கள் என்ற எண்ணத்தில் யதார்த்த நடையில் நான் படைக்கும் முதல் சரித்திரச்சம்பந்தப்பட்ட பதிப்பு.

இனி கதைக்கு போகலாமா ?

ஆமாங்கா நீங்க சரித்தான் ! கழுதைப்பாலில் குளித்தாக சொல்லப்படும் கிளியோப்பட்ராவேதான்.


கிளியோப்பட்ராவைப்பற்றி பல்வேறு கருத்துகள் பல்வேறு காலக்கட்டத்தில் நிலவின.

அவை..,


நீங்கள் நினைப்பது போல நம்ம கதாநாயகி ஒன்னும் பேரழகியெல்லாம் இல்லையாம் !!! சற்று குள்ளம் , சற்று பருமனான உருவம் , ஆனால் மிகவும் புத்திசாலியாம் !!!!:)

  1. ஒன்பது மொழிகள் பேசுபவள் !!!
  2. பல புத்தகங்கள் எழுதியுருக்கிறாள்.
  3. எகிப்தின் கடைசி ராணி.
  4. 19 வயதில் ஆட்சிப்பொறுப்பை ஏற்றவள்.
  5. பல ஆண்டுகள் , இரண்டு ரோமானியர்களின் துணைக்கொண்டு ஆட்சி செய்தவள்.

கிளியோவின் மூதாதையைர்கள்
கிளியோப்பட்ரா எகிப்தின் ராணி, ஆனால் அவளின் புர்விகம் மசிடோனியா.

அவளின் குடும்பப்பெயர் புட்டோலமி(Ptlomy),புட்டோலமிகள் மசிடோனியாவாசிகள்.

புட்டோலமிகள் 300 வருடங்கள் எகிப்தில் இருந்தாலும் அவர்களை எகிப்து மக்கள் வேற்று நாட்டவராகத்தான் கருதினர்.! :(

புட்டோலமிகள் பற்றி ஒரு சில செய்திகளை அடுத்தபதிப்பில் ....

நன்றி : படங்கள் விக்கிப்பிடியா.
நன்றி : இறவா புகழ்ப்பெற்ற கிளியோப்பட்ராவும் அவளின் பாம்பும்...(சரியா மொழிப்பெயர்த்திருக்கேனா : :)
(Dead Famous Clepatra and her Asp)

கருத்துகள் இல்லை: