திங்கள், 17 டிசம்பர், 2007

'நம்மை மீறி நாளை என்ன நடந்துவிடப் போகிறது'

ந்தியர்கள் பாசிட்டிவான எண்ணம் கொண்டவர்கள். எல்லாம் நல்லவிதமாகவே நடக்கும்! நம்மை மீறி எதுவும் நடந்துவிடாது என்ற நம்பிக்கை கொண்டவர்கள்' என்கிறது ஒரு சர்வே!

நல்ல விஷயம்தானே... இதை ஏன் கவலையோடு சொல்கிறீர்கள் என்கிறீர்களா..? அவர்கள் எடுத்த சர்வே எதிர்காலத்தைப் பற்றிய திட்டமிடல் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைப் பற்றி! இப்போது சொல்லுங்கள், இது கவலைக்குரிய விஷயமா இல்லையா!

ஏ.எக்ஸ்.ஏ. ஆசியா லைப் என்ற சர்வதேச இன்ஷ¨ரன்ஸ் நிறுவனம் எட்டு ஆசிய நாடுகளிடையே அடுத்த ஐந்து ஆண்டுகளில் வாழ்க்கையைப் பற்றி சராசரியைவிட அதிகமாகச் சம்பாதிக்கும், செலவழிக்கும், படித்த மக்கள் என்ன சொல்கிறார்கள் என்றொரு சர்வேயை நடத்தியது. அதில்தான் இந்தியாவைப் பற்றி இப்படியரு அதிர்ச்சியான தகவல் கிடைத்திருக்கிறது. இந்நிறுவனம் இந்தியாவில் பார்தி நிறுவனத்துடன் சேர்ந்து பார்தி ஏ.எக்ஸ்.ஏ லைப் இன்ஷ¨ரன்ஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்துள்ளது.

ஆசியாவிலுள்ள இந்தியா, சீனா, ஹாங்காங், இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய இடங்களில், 'வேலை, குடும்பம், உடல்நலம், ஓய்வுக்-காலம் ஆகியவற்றுக்கு மக்கள் கொடுக்கும் முக்கியத்துவம்' பற்றி 25 முதல் 50 வயது வரையானவர்களிடையே ஒரு சர்வே நடத்தப்-பட்டது.

'நம்மை மீறி நாளை என்ன நடந்துவிடப் போகிறது' என்ற மனோபாவத்தை பாசிட்டிவான எண்ணம் என்பதைவிட எதிர்காலத்தைப் பற்றிய திட்டமிடலில் பலவீனமாக இருப்பதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்தவகையில் இந்தியாவில் 82 சதவிகிதம் பேர் ஓய்வுக்காலத்தைப் பற்றிய தெளிவான திட்டமிடல் இல்லாமல் இருப்பதாக சர்வே சொல்கிறது. இந்த விஷயத்தில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இதுவே பிலிப்பைன்ஸில் 78%, சீனாவில் 69% என்ற அளவில் இருக்கிறது.

ஓய்வுக்காலத்தில் சந்தோஷமாக வாழவேண்டும் என்ற ஆசைமட்டும் இருக்கிறது. ஆனால், அதற்காக இப்போது வாழும் ஆடம்பர வாழ்க்கையில் சிறு தியாகம்கூடச் செய்து ஓய்வுக்-காலத்துக்காக ஒதுக்கி வைக்கத் தயாரில்லை என்ற மனநிலைதான் பெரும்பான்மையான ஆசியர்களிடம் இருக்கிறது என்ற வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறது இந்த சர்வே!

ஓய்வுக்காலம்தான் இப்படி என்-றால், உடல்நலம் சார்ந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொள்வதிலும் இந்தியர்கள் பெரிதாக ஆர்வம் காட்ட-வில்லை என்பது இன்னொரு அதிர்ச்சியான தகவல்! வெறும் 7 சதவிகிதம் பேர்தான் ஹெல்த் இன்ஷ¨ரன்ஸ் எடுத்திருக்கிறார்கள். பிலிப்பைன்ஸ் இந்த விஷயத்தில் கொஞ்சம் பரவாயில்லை, 21 சதவிகிதம் பேருக்கு ஹெல்த் இன்ஷ¨ரன்ஸ் பற்றிய தெளிவு இருக்கிறது.

சர்வேயின் முடிவில் இந்தியர்கள் வேலைக்குத்தான் முதலிடம் கொடுப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. உடல்நலத்துக்கு இரண்டாம் இடமும், குடும்பத்துக்கு மூன்றாம் இடமும் ஓய்வுக்காலத்துக்கு கடைசி இடமும் கொடுத்திருக்கிறார்கள்.

இன்ஷ¨ரன்ஸில் இந்தியாவின் நிலை என்னவாக இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி-யிருக்கிறது இந்த சர்வே. எதற்கு எந்த இடம் கொடுத்-திருக்கிறோம் என்பதல்ல... எல்லாவற்றுக்கும் போதிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதே இப்-போதைய தேவை!

நன்றி : விகடன்

கருத்துகள் இல்லை: