புதன், 20 பிப்ரவரி, 2008

கற்றது தமிழ் - திரைப்படம் பல பார்வைகள்

கற்றது தமிழ் - திரைப்படம் பல பார்வைகள் ,
எனக்கு பிடித்திருந்தது படமும் சரி பாடல்களும் சரி ...
அதில் நான் ரசித்த பாடல்களில் இருந்து சில வரிகள்....


வாழ்கை என்பது வெட்டு கத்திவலிக்க வலிக்க தொட்டுப்பார்த்தேன்
குறுவெட்டு தோற்றத்தில் வலியை கொஞ்சம் வெட்டிப்பார்த்தேன்
இது வேறு உலகம் ஓஹோஇது பத்தாம் கிரகம் ஒஹோ
இறைவா இங்கே வந்தால் நீயும் மிருகம்
.........
எங்கு நோக்கினும் அம்மணம்ஏற்றுக்கொள்ளுமா என் மனம்ஆடித்திருக்கிறதே....
.............
எனக்கேன ஒரு பூமி வேண்டுமேதமிழ் தான் அங்கே வேண்டுமே
அட டா இது நடக்குமா ...
என் பூமி எனக்கு கிடைக்குமா அதுவரை என் மனம் பொறுக்குமாஎன் தமிழ் இனம் பிழைக்குமா ...
அகிலம் ஆண்டது எங்கள் தமிழ் இனம் .....அடுத்தவன் சீண்டிப்பார்க்கையில் எலும்பை நொருக்கும் எங்கள் தமிழ் குணம்.

செவ்வாய், 5 பிப்ரவரி, 2008

பரஸ்பர நிதி(Mutual Fund) என்றால் என்ன? படம் வரைந்து பாகங்கள் குறிக்கவும்’.

பரஸ்பர நிதி. மியூட்சுவல் ஃபண்ட். இப்போது பலராலும் பல இடங்களிலும் பரபரப்பாகவே பேசப்படுகிற வார்த்தைகள் ஆகிவிட்டன இவை. எல்லா தரப்பு மக்களுக்கும் இதன் மீது ஆர்வம் அதிகமாகியிருக்கிறது. காரணம், அது தரும் முதலீட்டு வாய்ப்புகளும், அதிலிருந்து கிடைக்கும் மிக அதிகமான வருமானமும் தான்.
சிலருக்கு பங்குச் சந்தை பற்றித் தெரியும். அதில் அனுபவம் உண்டு. அதனால், அவர்களே தரகரைத் தொடர்புகொண்டு, பங்குகள் வாங்குகிறார்கள். விற்கிறார்கள். அதன் மூலம் லாபமும் பார்க்கிறார்கள்.
வேறு சிலருக்கு அனுபவம் இல்லை. ஆனாலும், அதில் கிடைக்கிற லாபத்தினை நாம் ஏன் விட வேண்டும் என்று நினைக்கிறார்கள். தவறே இல்லை.
இன்னும் சிலருக்கு அனுபவம் மற்றும் ஞானமும் உண்டு. ஆனாலும் அவர்களால் பங்குகளை வாங்குவதையோ, விற்பதையோ செய்யமுடியவில்லை. காரணம், அவர்களுக்கு நேரமில்லை. அவர்கள் ஈடுபட்டிருக்கும் வேலை, தொழில் அப்படி. அல்லது உடல் நிலை. அல்லது வயது அப்படி.
‘‘அய்யா, என்னிடம் ஆசையும் இருக்கிறது. அதற்கான நேரமும் கூட இருக்கிறது. என்னுடைய பிரச்னை வேறுவிதமானது. என்னால் சரியாக முடிவெடுக்க முடிவதில்லை. பங்குகளை வாங்க, விற்க எத்தனையோ தகவல்கள் தேவைப்படுகின்றன. அவற்றையெல்லாம் என்னால் தேட முடியவில்லை. சொல்லப்போனால், எந்தத் தகவல் எப்போது தேவைப்படும் என்பதே கூட பெரிய சவாலாக இருக்கிறது.’’
”நியாயமான பேச்சு. என்ன செய்யலாம்?’’
பங்குச் சந்தை வாய்ப்புகளையும் விடக்கூடாது. ஆனால் நாமாகச் செய்யவும் முடியவில்லை. இரண்டையும் சமாளித்து பணம் பண்ண ஏதாவது நல்ல வழியிருக்கிறதா?’’
‘‘இருக்கிறது.
காரில் போக ஆசை. வாங்க பணமும் இருக்கிறது. வாங்கியும் ஆகிவிட்டது. முதலாளிக்கு கார் ஓட்டத் தெரியவில்லை. அல்லது ஓட்டுவதற்கு அலுப்பாக இருக்கிறது. என்ன செய்யலாம்? ஓட்டுனர் வைத்துக்கொள்ளலாம். அவர், கார் ஓட்டுவதில் திறமைசாலி.
அதன்பின், நம்பாட்டுக்கு, காரில் ஏறி அமர்ந்துகொண்டு, எங்கே போக வேண்டும் என்று சொன்னால் போதும். அவர் போய்விடுவார். எந்த நெரிசலிலும், மழையிலும். வண்டி ஓடும் நேரம், படிப்பதோ, இசை கேட்பதோ, தூங்குவதோ அல்லது வேறு எதையுமோ நிம்மதியாகச் செய்யலாம்.
கார் ஓட்டுவதை மட்டுமா? வீட்டில் ஃபேனோ அல்லது ஏசியோ பழுதாகிவிட்டது. கூப்பிடு விவரம் தெரிந்தவரை. நேரமும் மிச்சம். தவறுகளும் நிகழாது. பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லித்தர வேண்டுமா? நல்ல டியூன் வாத்தியாரைத் தேடுகிறோம். பாட்டு, கராத்தே, டான்ஸ் எதுவானாலும் அதில் சிறந்தவர்களைக்கொண்டு நம் தேவைகளை முடித்துக்கொள்கிறோம்.
அதேதான் பங்குச் சந்தையிலும். விவரம் தெரிந்தவர்களை வைத்து பங்குகள் வாங்குவது, சரியான நேரங்களில் விற்பது. செய்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், நம்மிடம் இருக்கும் 5 ஆயிரத்துக்கும் 10 ஆயிரத்துக்கும், வல்லுனர் வைத்தா முதலீடு செய்ய முடியும்!’’
”நாம் ஏன் தனியாளாகச் செய்ய வேண்டும்? கூட்டுச் சேர்ந்து கொள்வோம். 50 பேர் 100 பேர் சேர்ந்தால், ஆளுக்கு பத்தாயிரம் ரூபாய் முதலீடு என்றால் என்ன ஆச்சு?’’
”என்ன ஆச்சு?’’
”10 லட்சம் ஆயிற்றே!’’
”ஏன் 100 பேரோடு நிறுத்த வேண்டும்? 10 ஆயிரம் பேர் ஒரு லட்சம் பேர் சேரட்டுமே!’’
”சேர்ந்தால்?’’
”100 கோடி ஆகிவிடும்.’’
”அடேயப்பா!’’
”பிறகு.. அவ்வளவு பணத்தினையும் நிர்வகிக்க, சரியாக முதலீடு செய்ய, என்ன ஊதியம் கொடுத்தும் வல்லுனர் வைக்க முடியாதா என்ன?’’
”ஏன் முடியாது?’’
”அதுதான் செய்கிறார்கள். அதன் பெயர்தான் பரஸ்பர நிதி, மியூட்சுவல் ஃபண்ட்.’’
இப்படிச் செய்வதற்கென்றே தனி நபர்கள் அல்ல, புகழ் பெற்ற நிறுவனங்களே இருக்கின்றன. அவை வல்லுனர்களைத் தேடி வைத்துக்கொண்டு, பின் அழைப்பு விடுக்கின்றன.. ‘வாருங்கள்.. தாருங்கள் நாங்கள் முதலீடு செய்து வருமானம் ஈட்டி, உங்களுக்குத் தருகிறோம்’ என்று.
அப்படிப்பட்ட நிறுவனங்கள் தான் பரஸ்பர நிதி நிறுவனங்கள். இவை மற்றவர்களிடம் இருந்து பணம் திரட்டி, அதனை பங்குச் சந்தையில் முதலீடு செய்து முதலீட்டாளர்களுக்கு லாபம் செய்துகொடுக்கும் வேலையைச் செய்கின்றன. இந்த வேலையில், வங்கிகளும் கூட ஈடுபட்டுள்ளன.
உதாரணத்திற்கு, நாம் முன்பு பார்த்த பாரத ஸ்டேட் வங்கி, கோட்டக், ரிலையன்ஸ் மணி, டாடா, பிர்லா நிறுவனங்கள், மிசிமிசிமி புருடென்ஷியல், ஹிஜிமி, பிராங்கிளின், இப்படி நூற்றுக்கணக்கான நிறுவனங்களும் வங்கிகளும் போட்டி போட்டுக்கொண்டு, முதலீட்டாளர்களை, ’வாருங்கள், தாருங்கள்’ என்று கூவிக் கூவி அழைக்கின்றன.
இப்படி பரஸ்பர நிதியில் புரளும் மொத்த பணத்தின் அளவு என்ன தெரியுமா? பல லட்சம் கோடிகள். இதனை நிறுவனங்கள் அரசாளும் சொத்து என்பார்கள். ஆங்கிலத்தில் கிssமீsts ஹிஸீபீமீக்ஷீ விணீஸீணீரீமீனீமீஸீt. சுருக்கமாக கிஹிவிs.
மிக அதிகமான பணத்தினைப் பெற்று நிர்வகித்து வரும் நிறுவனம் தற்சமயம் ரிலையன்ஸ்தான். 77 ஆயிரத்து 764 கோடி ரூபாய். அடுத்த இடத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ புரு, 54 ஆயிரத்து 952 கோடி. மூன்றாம் இடத்தில் யு.டி.ஐ. 52 ஆயிரத்து 179 கோடி ரூபாய்.”

நன்றி : குமுதம்