செவ்வாய், 22 நவம்பர், 2011

ச்சீ

சீறு
பாய்
பிறாண்டு
கடி
வீல் என கத்தித் தொலை
தேவைப்படும் போது
வால் ஆட்டி நடி
நித்தியானந்த துறவு க்குள்
நினைத்த போது
உறவு கொள்ள
தெரியாமல் தேடி அலைந்த பின்
வியர்வை காய் ய துரோக நிழலில்
ஓய்வெடு
இத்தோடு நிறுத்திக் கொள்
கல் எறியாதே
என் மேல்
என்னாவது என் மானம்
ச்சீ மனிதா.

கேசுவர்