‘கிணறு வெட்ட பூதம் கிளம்பிய’ கதை நமக் கெல்லாம் தெரியும். அதேபோல், டெல்லியில் ‘புத்தகம் எழுத பூதம் கிளம்புவதும்’ அடிக்கடி நடக்கும். அமைச்சர் முதல், ஆண்டி வரை சர்ச்சைக்குரிய கருத்துக்களைச் சொல்லிப் புத்தக பூகம்பம் கிளப்புவார்கள். லேட்டஸ்டாக கிளப்பியிருப்பவர்& ஓய்வு பெற்ற ராணுவ உயர் அதிகாரி!
இந்திய ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக இருந்து ஓய்வு பெற்றவர் ஹர்கிரத்
சிங். இன்று பாகிஸ்தான் லாகூரில் அடங்கிவிட்ட பஞ்சாப் பகுதியில் பிறந்த ஹர்கிரத், எத்தனையோ லட்சம் பேரைப் போல சுதந்திரத்துக்குப் பின் இந்தியாவுக்கு வந்துவிட்டவர். 1956&ல் இந்திய ராணுவத்தில் பணியைத் தொடங்கினார். இந்திய&-சீனப் போர், இந்திய-&பாகிஸ்தான் போர்களில் பங்கெடுத்தவர். முப்பத்தைந்து வருட அனுபவங்களுக்கு பின்னர் 1991&ல் ஓய்வு பெற்றார்.
சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதானத்தை நிலைநாட்ட இந்தியாவால் இலங்கைக்கு 1987&ம் ஆண்டு அனுப்பப்பட்ட ‘இந்திய அமைதிப் படை’க்கு (ஐ.பி.கே.எஃப்.) முதன்முதலில் தலைமை ஏற்றுச் சென்றவர் ஹர்கிரத் சிங்தான்.
இப்போது தன் புத்தகத்தில், ‘விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சுட்டுக் கொல்லவேண்டும் அல்லது கைது செய்யவேண்டும்...’ என்று அப்போது இலங்கையின் இந்திய ஹை கமிஷனராக இருந்த ஜே.என்.தீட்சித் தனக்குக் கட்டளையிட்டதாகவும், Ôஇதெல்லாம் பிரதமரின் (அன்று& ராஜீவ் காந்தி) உத்தரவுப்படிதான் சொல்லப்படுகிறது’ என்று தன்னிடம் கூறியதாகவும், தீட்சித்தின் அந்த உத்தரவுக்குத் தான் கீழ்ப்படிய மறுத்து விட்டதாகவும் சொல்லியிருக்கிறார் ஹர்கிரத் சிங்!
‘மிஸீtமீக்ஷீஸ்மீஸீtவீஷீஸீ வீஸீ ஷிக்ஷீவீறீணீஸீளீணீ: ஜிலீமீ மிறிரிதி ணிஜ்ஜீமீக்ஷீவீமீஸீநீமீ ஸிமீtஷீறீபீ’ என்ற தலைப்பில் எழுதியுள்ள இந்தப் புத்தகத்தில்,
‘‘நான் இந்திய ராணுவத்தில் 54-&வது தரைப்படை டிவிஷனின் [மிஸீயீணீஸீtக்ஷீஹ்] ஜெனரல் கமாண்டிங் ஆபீஸராக இருந்தேன். ராஜீவ் காந்தி பிரதமராக இருக்கும்போது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் உடன்படிக்கை ஏற்பட்டதையட்டி எங்களுடைய டிவிஷனை யாழ்ப் பாணத்துக்குப் போகும்படி அப்போதைய ராணுவ தளபதி சுந்தர்ஜியிடமிருந்து உத்தரவு வந்தது. 1987 ஜூலை 29-, 30 தேதிகளில் நாங்கள் புறப்பட்டோம். இலங்கை சென்று ஐந்து மாதங்கள் பணியாற்றிய என்னை, 1988 ஜனவரி மாதம் அங்கிருந்து டிரான்ஸ்ஃபர் செய்து விட்டனர். இலங்கையில் நான் இருந்தபோது நடந்த மூன்று விஷயங்கள் மிக முக்கியமானவை...’’ என்று முன்வரலாறு சொல்லி, பின்வரும் சில அதிர்ச்சிகளை அள்ளிப் போடுகிறார் இவர்&
ஒன்று: ‘‘விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கக் கோரியும் அவர்களிடமிருந்து ஆயுதங்களை பறிக்கும் முயற்சியிலும் நாங்கள் ஈடுபட்டோம். 1987, ஆகஸ்ட் மாதம் அவர்கள் ஆயுதங்களை ஒப்படைத்தனர். அதேநேரம், நமது உளவு அமைப்பான ‘ரா’, மற்ற தமிழ்ப் பேராளிகளுக்கு ஆயுதங்களைக் கொடுத்துக்கொண்டு இருந்தது. இதைப் புலிகள் வீடியோ எடுத்து என்னிடம் காட்டி முறையிட்டனர். இதை நான் நம்முடைய ஹைகமிஷனுக்குக் கொண்டு சென்றேன்.ÕÕ
இரண்டு: ÔÔஜே.என்.தீட்சித், ‘இந்திய அமைதிப்படை மூலம் புலிகளைப் பற்றிய அவதூறுகளை அங்குள்ள தமிழ் மக்கள் மத்தியில் பரப்பச் சொன்னார். அதை நாங்கள் ஏற்க மறுத்தோம். நாங்கள் சொல்வதை நம்ப அங்கு யாரும் தயாராக இல்லை என்பதுதான் யதார்த்தம். அங்குள்ள தமிழ்மக்கள் தனி ஈழத்தை விடுதலைப்புலிகள் மூலமாக மட்டுமே அடைய முடியும் என்று உறுதியாக நம்பினார்கள். இதையெல்லாம் தீட்சித்திடம் நான் சொன்னபோது,
‘ஜெனரல், நான் உங்களுக்குப் போடும் கட்டளைகள் எல்லாம் பிரதமரிடம் கலந்து கொண்டுதான் சொல்கிறேன். இதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்வது நல்லது’ என்று அழுத்தமாகச் சொன்னார் தீட்சித்.ÕÕ
மூன்று: ÔÔ1987&ல் செப்டம்பர் 14, 15 தேதிகளில் எனக்கு தீட்சித்திடமிருந்து போன் வந்தது. Ôஇந்திய அமைதிப்படையிடம் பேச்சுவார்த்தை நடத்த பிரபாகரன் வரும்போது, அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுங்கள்... இல்லையென்றால் அவரை நீங்கள் கைது செய்தாவது இந்திய அரசிடம் ஒப்படை யுங்கள்’ என்றார் தீட்சித். அதிர்ந்துபோன நான், ‘ஓவர் ஆல் ஃபோர்ஸ் கமாண்டரான லெப்டினென்ட் ஜெனரல் டிபேந்தர் சிங்கிடம் பேசிவிட்டு, என் கருத்தை உங்களுக்குத் தெரிவிக்கிறேன்’ என்று சொல்லி போனை வைத்துவிட்டேன். டிபேந்தர் சிங்கிடம் பேசியபோது, அவரும் ஆவேசமடைந்து, ‘தீட்சித்திடம் சொல்லுங்கள்... நம்முடைய ராணுவம் ஒருபோதும் முதுகில் சுடுகிற கோழையல்ல. அதிலும் சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்து, அதன்படி வெள்ளைக் கொடியின்கீழ் வரும் ஒருவரை சுட்டுக்கொல்வது நமக்கு எந்த வகையிலும் அழகல்ல’ என்றார்.
இதை நான் சொன்னதும், ‘நான் உங்களுக்கு இடுகிற கட்டளை என்னுடையதல்ல. அவருடைய (ராஜீவ் காந்தி) உத்தரவின்படிதான். நீங்கள்தான் இந்திய அமைதிப்படைக்கு கமாண்டிங் ஆபீஸர். உங்களுக்கு தான் இதை நிறைவேற்றும் பொறுப்பு இருக்கிறது’ என்றார் தீட்சித் கோபமாக.
மறுநாள் காலையில் டெல்லியிலுள்ள தலைமையகத்தில் இருந்த ராணுவ ஆபரேஷன்களுக்கான இயக்குநர் ஜெனரல் லெப்.ஜெனரல் பி.சி. ஜோஷியைத் தொடர்பு கொண்டேன். அவர் என்னுடைய நிலைப்பாட்டுக்கே ஆதரவு தெரிவித்தார். ராணுவத் தளபதி சுந்தர்ஜியும் தீட்சித்மீது கோபத்தை வெளிப்படுத்தினார்.’’ &இவைதான் ஹர்கிரத் சிங் புத்தகத்தில் சர்ச் சைக்குரிய பகுதிகள்.
தற்போது சிங் டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியில் வசிப்பதை அறிந்து, அவரிடம் இந்தப்புத்தகம் தொடர்பாக சில கேள்விகள் கேட்டோம். முதலில் தயங்கினாலும், பிறகு சரளமாகப் பேசத் தொடங்கினார்&
‘‘பிரபாகரனைக் கொலை செய்யும்படி ராஜீவ் காந்திதான் உத்தரவிட்டார் என்று ஜே.என்.தீட்சித் உங்களிடம் கூறியதற்கு என்ன ஆதாரம்? நீங்கள் குறிப் பிடும் அதிகாரிகளில் சிலர் மட்டுமே இப்போது உள்ளனர். ராஜீவோ, தீட்சித்தோ இல்லை..! அவர்கள் இருந்தபோது இப்படி எந்த தகவலும் எங்கும் வெளியாக வில்லையே..?ÕÕ
‘‘இந்தப் புத்தகம் எனது இருபது வருட முயற்சியில் வெளியாகியுள்ளது. என் நினைவில் என் மனதில் உள்ளதை அப்படியே ரொம்பவும் விவரமாக எழுதியிருக்கிறேன். புத்தகத்தில் நான் குறிப்பிட்டதைப் போன்ற உத்தரவுகளை தீட்சித் எங்களுக்குப் பிறப்பித்தார் என்பது முற்றிலும் உண்மை. ராணுவம் அந்த உத்தரவுகளுக்கு அடிபணியாது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்.
பிரபாகரனைச் சுடச் சொன்ன தீட்சித்திடம், ‘உங்களை என் வீட்டுக்கு வரவழைத்து நான் உங்களைத் துப்பாக்கியால் சுட்டால் எப்படியிருக்கும்?’ என்றுகூட நான் திருப்பிக் கேட்டேன். அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார் என்பது எனக்கு நினைவிக்கிறது.
தீட்சித் அடிக்கடி, ‘நான் பிரதமருக்காகப் பேசுகிறேன். இதுவெல்லாம் பிரதமர் போட்ட உத்தரவு’ என்பார். அவர் சொல்வதை எங்கள் பிரிகேடியர்கள், காமாண்டர்கள் டேப்பில் ரிக்கார்டு செய்துகொள்வார்கள். இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் சொல்ல ஆசைப்படுகிறேன். புலிகள் ஆயுதங்களை எங்களிடம் ஒப்படைக்க சம்மதம் தெரிவிக்கும் கடிதம் ஒன்றை பிரபாகரனிடமிருந்து நாங்கள் பெற்றோம். ‘1987&ம் ஆண்டு ஆகஸ்ட் 5&ம் தேதி, ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டுப் பொதுக்கூட்டத்திலும் பேசுவதாக’ அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் பிரபாகரன். கடிதத்தைப் பார்த்த தீட்சித், அந்த சந்தர்ப்பத்தில்கூட, ‘நான் பிரதமர் சார்பாக இதைப் பாராட்டுகிறேன்’ என்று கூறினார்.’’
‘‘பொறுப்போடு பணியாற்றிய உங்களைப் போன்ற வர்களை மாற்றம் செய்தார்கள் என்றும் புத்த-கத்தில் சொல்லியிருக்கிறீர்கள்... உங்கள் மாற்றத்துக்குக் காரணம், ‘பிரபாகரனை சுட்டுக்கொல்ல சம்மதிக்கவில்லை’ என்பதுதானா? மாற்றம் வந்ததுமே நீங்கள் பிரதமர் கவனத்துக்கு ஏன் கொண்டு போக வில்லை?’’
‘‘ராஜீவ் காந்தி ஓரிரு முறை பொதுக்கூட்டங்களில் என்னுடைய பெயரை குறிப்பிட்டுப் பேசியிருக் கிறார். ‘ஜெனரல் ஹர்கிரத் சிங் என்னிடமிருந்து உத்தரவுகளைப் பெற்றுத்தான் செயல்படுகிறார், யாருடைய கட்டளையின் பேரிலும் அவர் செயல்பட மாட்டார்’ என்று சொல்லியிருக்கிறார். ஜெயவர்த்தனா ஒரு கூட்டத்தில், ‘நான்தான் இலங்கையின் சுப்ரீம் கமாண்டர். ஆனால், ஜெனரல் என்னுடைய உத்தரவுபடி நடந்துகொள்ள மறுக்கிறார்’ என்றார். இதற்கு பதில் சொல்வதற்காகத்தான் ராஜீவ் காந்தி அப்படிப் பேசினார். மற்றபடி, ராணுவத்தில் பிரதமரையெல்லாம் தலைமைத் தளபதிதான் சந்திக்கமுடியும்.’’
‘‘புலிகளுக்கு எதிரான ஆபரேஷனில் இந்திய அமைதிப்படை பெரும் சேதமும் தோல்வியும் சந்தித்தது என்ற கருத்து அழுத்தமாக இன்றும் நிலவுகிறதே..?’’
‘‘போரிட்டால்தானே வெற்றி& தோல்வி என்ற பேச்சு வரும்? நாங்கள் அமைதியை நிலைநாட்டவே சென் றோம். இதற்காக பல்வேறு சமாதான முயற்சிகளை மேற்கொண்டோம். யாழ்ப்பாணத்தில் இருந்த இலங்கை ராணுவத்தினரை பத்திரமாகக் கொழும்புக்கு கொண்டு போனோம். யாழ்ப்பாணத்தில் மூடப்பட்டு இருந்த பெட்ரோல் பம்புகளை திறந்தோம். முடக்கி வைக்கப்பட்டிருந்த ரயில்களை ஓடச் செய்தோம்...’’
ÔÔராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவத்துக்கும் அமைதிப்படை இலங்கை சென்றதற்கும் தொடர்பு இருக்கிறதா, இல்லையா? குறிப்பாக நமது ராணுவத் தினர் மீது கற்பழிப்பு புகார்கள் வந்ததே..?ÕÕ
‘‘ராஜீவ் கொலை சம்பவம் பற்றி நான் கருத்துச் சொல்ல முடியாது. இலங்கையில் நான் இருந்தபோது ஒரே ஒரு கற்பழிப்பு புகார் வந்தது. அந்த நபருக்கும் கடுமையான தண்டணையைக் கொடுத்து வெளியேற்றினோம். சென்னை ராணுவக் கோர்ட்டில் அவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டு, பணியிலிருந்தும் நீக்கப்பட்டார். நான் 1987&ம் வருடம் இலங்கை சென்றேன். 88&ம் வருடம் அங்கிருந்து இந்தியா திரும்பிவிட்டேன். ஆனால் இந்திய ராணுவம் 90&ம் வருடம்தான் திரும்பியது!’’
நன்றி : விகடன்
புதன், 17 அக்டோபர், 2007
செவ்வாய், 4 செப்டம்பர், 2007
கூவாகம்
கூவாகத்தில் ஆண்டுதோறும் நடக்கும் அலிகள் திருவிழாவுக்குச் செல்ல வேண்டும்
என்று பல ஆண்டுகளாக நினைத்து வந்தது இப்போது தான் நிறைவேறியது.
மகாபாரதத்தில் பாரதப் போரில் பாண்டவர்கள் வெற்றிபெற 32 சாமுத்ரிகா
லட்சணங்களும் பொருந்திய ஒரு ராஜகுமாரனை களப்பலி இட வேண்டும் என்று சாஸ்திர
விற்பன்னர்கள் கூறினர். அதன்படி பார்த்தபோது பாண்டவர் தரப்பில் இரண்டு பேர்
மட்டுமே களப்பலிக்குத் தகுதியானவர்களாக இருந்தனர். ஒருவன் கிருஷ்ணன்.
மற்`றாருவன்,அர்ச்சுனனுக்கும், நாக கன்னிகைக்கும் பிறந்த அரவான். 'என்னையே
களப்பலி கொடுங்கள்' என முன் வந்தான் அரவான்.
களப்பலி கொடுப்பதற்கு முன்பு, 'உனக்கு ஏதேனும் இறுதி ஆசை இருந்தால் சொல்'
என்று அரவானிடம் கேட்கிறான் கிருஷ்ணன்.
அதற்கு அரவான் ஸ்திரீ இன்பம் என்றால் என்னவென்றே தெரியாது எனவும், தான்
பலியாவதற்கு முன்பு ஒரு ஸ்திரீயுடன் போகம் கொள்ள வேண்டும் எனவும் கூறுகிறான்.
களப்பலியாகப் போகும் அரவானை மணந்து கொள்ள எந்தப் பெண்ணும்
முன்வரவில்லை. அதனால் கிருஷ்ணன் பெண் ரூபம் கொண்டு அரவானை மணம் செய்து
கொள்கிறான். மறுநாள் அரவான் பலியிடப்படுகிறான். பெண் ரூபம் கொண்ட கிருஷ்ணன்
தாலியறுக்கிறான்.
இந்தியா முழுவதும் உள்ள அலிகள் சித்ரா பௌர்ணமியை ஒட்டி கூவாகத்தில்
கூடுகிறார்கள். தங்களை கிருஷ்ணனின் வாரிசாகக் கருதி இங்குள்ள கூத்தாண்டவர்
கோவில் பூசாரியின் கைகளால் தாலி கட்டிக் கொள்கிறார்கள்.
மொத்தம் பதினைந்து நாட்கள் நடக்கும் கூவாகம் திருவிழாவில் தாலி கட்டிக் கொள்ளும்
நிகழ்ச்சியே முக்கியமானது. கொடியேற்றம் நடந்த பதினான்காம் நாள் இரவு இந்நிகழ்ச்சி
நடைபெறுகிறது. அலிகள் புது மணப் பெண்களைப் போல் தங்களை அலங்கரித்துக்
கொள்கிறார்கள். பட்டுப்புடவை, கை நிறைய வளைகள், தலை கொள்ளாத பூ.
பூசாரி கையால் தாலி கட்டிக் கொண்டவுடன் ஒரே கூத்தும் கும்மாளமுமாக கும்மியடித்து
ஆடிப்பாடுகிறார்கள்.இரவு முழுதும் கொண்டாட்டம் தொடர்கிறது.
விழுப்புரத்திலிருந்து சுமார் 30 கி.மீ. தூரத்திலுள்ள ஒரு குக்கிராமம் கூவாகம். பத்து
குடிசைகள் கூட இல்லை. அவ்வளவு சிறிய கிராமத்தில் ஒரு லட்சம் பேர்
கூடியிருக்கிறார்கள். அதில் பாதிப்பேர் அலிகள். மற்றவர்கள் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து
வந்த மக்கள்.
வயல் வரப்புகள் எங்கும் அலிகள் கூட்டம் கூட்டமாக ஆடிப்பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
பல அலிகள் பெண்களை விடவும் அழகாக இருக்கிறார்கள். முந்தின நாள் நடந்த அழகிப்
போட்டியில் முதலிடம் பெற்ற பெங்களூர் ரஞ்சிதாவும், இரண்டாவதாக வந்த ஈரோடு
மதுமிதாவும் உலகின் நம்பர் ஒன் மாடல் நோமி கேம்பெல்லை விடவும் அழகாக
இருந்தனர்.
பலரிடமும் பேசிக் கொண்டிருந்தேன். எல்லாமே ஒரு நாவல் அளவு விரியக் கூடிய
கதைகள்.
செக்ஸ் பற்றிய எந்தக் கூச்சமுமின்றிப் பேசினார்கள். மிகவும் நட்பாக இருந்தார்கள். கை
குலுக்கியும் தோள் மீது கை வைத்தும், வெகு நாட்கள் பழகியது போல் பேசினார்கள்.
ஒரு அலி சொன்னார், தனக்கு ஒன்பதாவது வயதில் பெண்ணைப் போன்ற உணர்வுகள்
தோன்றியதாகவும் அதற்கு மேல் பள்ளிக்குச் செல்வது தடை பட்டதாகவும், எல்லா
அலிகளுமே பொதுவாகச் சொன்ன ஒரு விஷயம். சமூகத்தில் தங்களுக்கு எவ்வித
மரியாதையும் இல்லை என்பது, ஈவ் டீசிங் காரணமாக வாரம் ஒரு பெண் தற்கொலை
செய்து கொள்ளும் தமிழ்நாட்டில் அலிகளின் நிலையைப் பற்றிக் கேட்கவா வேண்டும்?
வாடகைக்கு வீடு கிடைப்பதில்லை, பேருந்துகளில் செல்ல முடியவில்லை, தனியாக
நடமாட முடிவதில்லை, ரேஷன் கார்டு இல்லை, கிண்டல் செய்பவர்களைப் பற்றி
போலீசிடம் புகார் செய்ய முடிவதில்லை (செய்தால், போலீசாரே சிரிக்கின்றனர்), வேலை
கிடைப்பதில்லை, மூன்று வேளை உணவுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதனால்
வேறு வழியின்றி விபச்சாரத்திற்குத் தள்ளப்படுகிறோம் என்கிறார்கள் பலர்.
ரஞ்சினி என்ற அலி மும்பையில் ஒரு இரவு விடுதியில் நடனமாடுவதாகச் சொன்னார்.
அவருடைய வாழ்க்கை தனிக்கதை.
அலிகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சியில் அலிகள் மட்டுமே பங்கேற்பதில்லை.
சுற்றுப்புற கிராமங்களிலுள்ள ஆயிரக்கணக்கான ஆண்களும் நேர்த்திக் கடனுக்காக தாலி
கட்டிக் கொள்கிறார்கள். கைகளில் வளையல் அணிந்து கொள்கிறார்கள். பல இடங்களில்
பெண்கள் தத்தம் கணவன்மார்களுக்கு புடவை கட்டி விடுவதைப் பார்த்தேன். ஒரே ஒரு
நாள் அந்த ஆண்கள் பெண்களாக மாறுகிறார்கள். கூத்தாண்டவர் கோவில் வாசலில்
அரவானின் உருவச்சிலையை அமைக்கும் பணி இரவு முழுவதும் நடைபெறுகிறது.
மரத்தாலான பதினெட்டு அடி சிலை இது. தனித்தனி பாகங்களாகச் செய்யப்பட்டு
இணைக்கப்பட்ட அந்தச் சிலை பூக்களால் அலங்கரிக்கப்பட்டு தேரில் வைக்கப்படுகிறது.
காலை ஏழு மணி அளவில் தேர் அழிகளம் நோக்கிப் புறப்படுகிறது. அதுவரை-அதாவது
இரவு முழுதும் தேரின் எதிரே அம்பாரமாய்க் குவிந்து கிடக்கும் கற்பூரத்தை ஏற்றி,
அதைச் சுற்றிலும் கும்மியடித்து ஆடிப்பாடிக் கொண்டிருந்த அலிகள், தேர் புறப்பட்டதும்
ஒப்பாரி வைத்து அழ ஆரம்பிக்கின்றனர். 'போறாரே போறாரே எங்க சாமி அழிகளம்
நோக்கிப் போறாரே' என்று கதறிய படி தேரின் பின்னால் ஓடுகின்றனர்.
கோவிலில் இருந்து அழிகளம் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது. வயல் வரப்புகளைத்
தாண்டி குறுக்கு வழியில் அழிகளம் நோக்கிச் செல்கிறேன். அரவான் வந்துசேர
மதியத்திற்கு மேலாகிவிடும் என்கின்றனர்.
அழிகளத்தில் பெரியதொரு ஆலமரம் நிற்கிறது. அதன் கீழே ஒரு பூசாரி.அங்கே வந்து
சேரும் அலிகளின் கை வளையல்களை உடைத்து தாலியை அறுக்கிறார். அறுபட்ட
தாலிகள் ஒரு கொடிமரத்தில் குவிகின்றன. பூக்களையும் மாலைகளையும் அறுத்து
எறிகின்றனர். அலிகள் கூந்தலை விரித்துப் போடுகின்றனர். அவர்களையும் மீறி அழுகை
வெடிக்கிறது. வாழ்வில் ஒரு இரவு மட்டுமே பெண்ணாக வாழ முடிந்த அவர்கள் தங்கள்
கணவனை இழந்து, வாழ்வை இழந்து மீளாத் துயரில் மூழ்குகின்றனர்.
ஒப்பாரிப் பாடல்கள் அந்தப் பிராந்தியமெங்கும் காற்றின் அலைகளில் பரவுகின்றன.
மார்பிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு மிக நீண்ட ஒப்பாரிப் பாடல்களைப் பாடியபடி
வட்டமாகச் சுற்றிச் சுற்றி ஓலமிடுகின்றனர்.
நேர்த்திக் கடனுக்காக தாலி கட்டி, புடவை கட்டி, வளையல் போட்ட ஆண்களும்
தாலியறுத்து வளையலை உடைத்துவிட்டு மலங்க மலங்க விழித்தபடி ஒன்றும் புரியாமல்
நிற்கின்றனர்.
நன்றி : எங்கோ படித்தது ......
என்று பல ஆண்டுகளாக நினைத்து வந்தது இப்போது தான் நிறைவேறியது.
மகாபாரதத்தில் பாரதப் போரில் பாண்டவர்கள் வெற்றிபெற 32 சாமுத்ரிகா
லட்சணங்களும் பொருந்திய ஒரு ராஜகுமாரனை களப்பலி இட வேண்டும் என்று சாஸ்திர
விற்பன்னர்கள் கூறினர். அதன்படி பார்த்தபோது பாண்டவர் தரப்பில் இரண்டு பேர்
மட்டுமே களப்பலிக்குத் தகுதியானவர்களாக இருந்தனர். ஒருவன் கிருஷ்ணன்.
மற்`றாருவன்,அர்ச்சுனனுக்கும், நாக கன்னிகைக்கும் பிறந்த அரவான். 'என்னையே
களப்பலி கொடுங்கள்' என முன் வந்தான் அரவான்.
களப்பலி கொடுப்பதற்கு முன்பு, 'உனக்கு ஏதேனும் இறுதி ஆசை இருந்தால் சொல்'
என்று அரவானிடம் கேட்கிறான் கிருஷ்ணன்.
அதற்கு அரவான் ஸ்திரீ இன்பம் என்றால் என்னவென்றே தெரியாது எனவும், தான்
பலியாவதற்கு முன்பு ஒரு ஸ்திரீயுடன் போகம் கொள்ள வேண்டும் எனவும் கூறுகிறான்.
களப்பலியாகப் போகும் அரவானை மணந்து கொள்ள எந்தப் பெண்ணும்
முன்வரவில்லை. அதனால் கிருஷ்ணன் பெண் ரூபம் கொண்டு அரவானை மணம் செய்து
கொள்கிறான். மறுநாள் அரவான் பலியிடப்படுகிறான். பெண் ரூபம் கொண்ட கிருஷ்ணன்
தாலியறுக்கிறான்.
இந்தியா முழுவதும் உள்ள அலிகள் சித்ரா பௌர்ணமியை ஒட்டி கூவாகத்தில்
கூடுகிறார்கள். தங்களை கிருஷ்ணனின் வாரிசாகக் கருதி இங்குள்ள கூத்தாண்டவர்
கோவில் பூசாரியின் கைகளால் தாலி கட்டிக் கொள்கிறார்கள்.
மொத்தம் பதினைந்து நாட்கள் நடக்கும் கூவாகம் திருவிழாவில் தாலி கட்டிக் கொள்ளும்
நிகழ்ச்சியே முக்கியமானது. கொடியேற்றம் நடந்த பதினான்காம் நாள் இரவு இந்நிகழ்ச்சி
நடைபெறுகிறது. அலிகள் புது மணப் பெண்களைப் போல் தங்களை அலங்கரித்துக்
கொள்கிறார்கள். பட்டுப்புடவை, கை நிறைய வளைகள், தலை கொள்ளாத பூ.
பூசாரி கையால் தாலி கட்டிக் கொண்டவுடன் ஒரே கூத்தும் கும்மாளமுமாக கும்மியடித்து
ஆடிப்பாடுகிறார்கள்.இரவு முழுதும் கொண்டாட்டம் தொடர்கிறது.
விழுப்புரத்திலிருந்து சுமார் 30 கி.மீ. தூரத்திலுள்ள ஒரு குக்கிராமம் கூவாகம். பத்து
குடிசைகள் கூட இல்லை. அவ்வளவு சிறிய கிராமத்தில் ஒரு லட்சம் பேர்
கூடியிருக்கிறார்கள். அதில் பாதிப்பேர் அலிகள். மற்றவர்கள் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து
வந்த மக்கள்.
வயல் வரப்புகள் எங்கும் அலிகள் கூட்டம் கூட்டமாக ஆடிப்பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
பல அலிகள் பெண்களை விடவும் அழகாக இருக்கிறார்கள். முந்தின நாள் நடந்த அழகிப்
போட்டியில் முதலிடம் பெற்ற பெங்களூர் ரஞ்சிதாவும், இரண்டாவதாக வந்த ஈரோடு
மதுமிதாவும் உலகின் நம்பர் ஒன் மாடல் நோமி கேம்பெல்லை விடவும் அழகாக
இருந்தனர்.
பலரிடமும் பேசிக் கொண்டிருந்தேன். எல்லாமே ஒரு நாவல் அளவு விரியக் கூடிய
கதைகள்.
செக்ஸ் பற்றிய எந்தக் கூச்சமுமின்றிப் பேசினார்கள். மிகவும் நட்பாக இருந்தார்கள். கை
குலுக்கியும் தோள் மீது கை வைத்தும், வெகு நாட்கள் பழகியது போல் பேசினார்கள்.
ஒரு அலி சொன்னார், தனக்கு ஒன்பதாவது வயதில் பெண்ணைப் போன்ற உணர்வுகள்
தோன்றியதாகவும் அதற்கு மேல் பள்ளிக்குச் செல்வது தடை பட்டதாகவும், எல்லா
அலிகளுமே பொதுவாகச் சொன்ன ஒரு விஷயம். சமூகத்தில் தங்களுக்கு எவ்வித
மரியாதையும் இல்லை என்பது, ஈவ் டீசிங் காரணமாக வாரம் ஒரு பெண் தற்கொலை
செய்து கொள்ளும் தமிழ்நாட்டில் அலிகளின் நிலையைப் பற்றிக் கேட்கவா வேண்டும்?
வாடகைக்கு வீடு கிடைப்பதில்லை, பேருந்துகளில் செல்ல முடியவில்லை, தனியாக
நடமாட முடிவதில்லை, ரேஷன் கார்டு இல்லை, கிண்டல் செய்பவர்களைப் பற்றி
போலீசிடம் புகார் செய்ய முடிவதில்லை (செய்தால், போலீசாரே சிரிக்கின்றனர்), வேலை
கிடைப்பதில்லை, மூன்று வேளை உணவுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதனால்
வேறு வழியின்றி விபச்சாரத்திற்குத் தள்ளப்படுகிறோம் என்கிறார்கள் பலர்.
ரஞ்சினி என்ற அலி மும்பையில் ஒரு இரவு விடுதியில் நடனமாடுவதாகச் சொன்னார்.
அவருடைய வாழ்க்கை தனிக்கதை.
அலிகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சியில் அலிகள் மட்டுமே பங்கேற்பதில்லை.
சுற்றுப்புற கிராமங்களிலுள்ள ஆயிரக்கணக்கான ஆண்களும் நேர்த்திக் கடனுக்காக தாலி
கட்டிக் கொள்கிறார்கள். கைகளில் வளையல் அணிந்து கொள்கிறார்கள். பல இடங்களில்
பெண்கள் தத்தம் கணவன்மார்களுக்கு புடவை கட்டி விடுவதைப் பார்த்தேன். ஒரே ஒரு
நாள் அந்த ஆண்கள் பெண்களாக மாறுகிறார்கள். கூத்தாண்டவர் கோவில் வாசலில்
அரவானின் உருவச்சிலையை அமைக்கும் பணி இரவு முழுவதும் நடைபெறுகிறது.
மரத்தாலான பதினெட்டு அடி சிலை இது. தனித்தனி பாகங்களாகச் செய்யப்பட்டு
இணைக்கப்பட்ட அந்தச் சிலை பூக்களால் அலங்கரிக்கப்பட்டு தேரில் வைக்கப்படுகிறது.
காலை ஏழு மணி அளவில் தேர் அழிகளம் நோக்கிப் புறப்படுகிறது. அதுவரை-அதாவது
இரவு முழுதும் தேரின் எதிரே அம்பாரமாய்க் குவிந்து கிடக்கும் கற்பூரத்தை ஏற்றி,
அதைச் சுற்றிலும் கும்மியடித்து ஆடிப்பாடிக் கொண்டிருந்த அலிகள், தேர் புறப்பட்டதும்
ஒப்பாரி வைத்து அழ ஆரம்பிக்கின்றனர். 'போறாரே போறாரே எங்க சாமி அழிகளம்
நோக்கிப் போறாரே' என்று கதறிய படி தேரின் பின்னால் ஓடுகின்றனர்.
கோவிலில் இருந்து அழிகளம் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது. வயல் வரப்புகளைத்
தாண்டி குறுக்கு வழியில் அழிகளம் நோக்கிச் செல்கிறேன். அரவான் வந்துசேர
மதியத்திற்கு மேலாகிவிடும் என்கின்றனர்.
அழிகளத்தில் பெரியதொரு ஆலமரம் நிற்கிறது. அதன் கீழே ஒரு பூசாரி.அங்கே வந்து
சேரும் அலிகளின் கை வளையல்களை உடைத்து தாலியை அறுக்கிறார். அறுபட்ட
தாலிகள் ஒரு கொடிமரத்தில் குவிகின்றன. பூக்களையும் மாலைகளையும் அறுத்து
எறிகின்றனர். அலிகள் கூந்தலை விரித்துப் போடுகின்றனர். அவர்களையும் மீறி அழுகை
வெடிக்கிறது. வாழ்வில் ஒரு இரவு மட்டுமே பெண்ணாக வாழ முடிந்த அவர்கள் தங்கள்
கணவனை இழந்து, வாழ்வை இழந்து மீளாத் துயரில் மூழ்குகின்றனர்.
ஒப்பாரிப் பாடல்கள் அந்தப் பிராந்தியமெங்கும் காற்றின் அலைகளில் பரவுகின்றன.
மார்பிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு மிக நீண்ட ஒப்பாரிப் பாடல்களைப் பாடியபடி
வட்டமாகச் சுற்றிச் சுற்றி ஓலமிடுகின்றனர்.
நேர்த்திக் கடனுக்காக தாலி கட்டி, புடவை கட்டி, வளையல் போட்ட ஆண்களும்
தாலியறுத்து வளையலை உடைத்துவிட்டு மலங்க மலங்க விழித்தபடி ஒன்றும் புரியாமல்
நிற்கின்றனர்.
நன்றி : எங்கோ படித்தது ......
புதன், 29 ஆகஸ்ட், 2007
இந்தியாவின் தேசிய மொழி என்ன ?
பதிப்புக்கு காரணம் : ஆர்குடில் தமிழ் சங்கமம் (Tamil Sangamam) என்கிற தனியினத்தில் நடந்த இந்தியாவின் தேசிய மொழி எது என்கிற வாக்கெடுப்பின் முடிவுகள்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நமது நாட்டின் தேசிய மொழி எது என்ற வாக்கெடுப்பில் தொடங்கி இன்று வரை பதிந்த வாக்குகள்.
மொத்தம் = 23 ஓட்டுகள்
தமிழ் = 8%
ஹிந்தி = 65 %
சமஸ்கிருதம் = 0%
ஒரு தனிப்பட்ட மொழிக்கும் இந்த அந்தஸ்த்து இல்லை = 26 %
இந்த கட்டுரையை நான் கண்மூடித்தனமாகவோ வெறித்தனமாகவோ எழுத முற்ப்படவில்லை.
65 % நமது தமிழ் நண்பர்கள் தெளிவுப்பெறசெய்வதற்கான சிறு முயற்சி.
மொழி
மொழி என்பது மனிதனின் கண்டுபிடிப்புகளிலே மிகவும் அரிதான உன்னத கண்டுபிடிப்பு.
மனிதனின் வாழ்க்கைமுறை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை தெரிந்துக்கொள்ள உதவும் உன்னத சாவி.
அறிவாற்றல்,சிந்தனை,உணர்வுகளை சேமித்து அடுத்த சங்கதிக்கு கொண்டுச்செல்லும் பொக்கிஷம்.
நன்றி : ஆபத்தில் இருக்கும் மொழிகளின் ஆய்வுக்கட்டுரை அக்டோபர் 2000 (நமது செம்மொழி தமிழும் இதில் அடங்கும்)
1. இந்தியாவின் தேசிய மொழி எது ?
இந்தியா(Liberal Democracy, Unity in Diversity) சமய சார்ப்பற்ற மொழிபேதமற்ற பல தரப்பட்ட இனமக்கள் வாழ்கிற நாடு.இனம் என்றால் அதற்கேன தனிப்பட்ட கலாச்சாரம்,மொழி...என்று இருக்குமல்லவா!
இந்தியாவின் பலமே இது தான் வெவ்வேறு இன மத மக்கள் ஒருகினைந்து வாழ்தல்,
நாம் நம் சக மனிதர்களின் உணர்வுகளுக்கு மதிப்பும் மரியாதையும் அளிப்பவர்கள் தானே.
ஆகையால் எப்படி நாம் ஒரு தனிப்பட்ட மொழிக்கு
பொருந்தா அங்கிகாரத்தை கொடுப்போம், நமது சட்டமும் சொல்லவில்லை இன்ன மொழி தான் தேசியமொழி என்று,உங்களுக்கு சந்தேகம் இருப்பின்
இந்தியாவின் அலுவலக மொழிகள் வலைத்தளத்திற்கு சென்றுப்பார்த்தால் விளங்கும்,
2. ஏன் ஹிந்தி இந்தியாவின் தேசியமொழியாக இருக்ககூடாதா ?
இந்த கேள்விக்கான காரணமே தவறான புரிதலின் அடிப்படையிலானது.
என்ன அடிப்படை ?
ஹிந்தி என்கிற ஒரே மொழி தான் வட இந்தியா முழுவது பேசப்படுகிறது, சத்தியமாக இல்லை , மேலும் பாலிஉட் ஹிந்தி கனவு தொழிற்சாலையும் ஒரு மறைமுக காரணம்.
புள்ளிவிவப்படி அதாவது உண்மையான நிலை
இந்தியாவின் மொத்த மக்கள் தொகை = 1 பில்லியன்...
ஹிந்தி பேசுவோர் எண்ணிக்கை : 337 மில்லியன்
வேற்று மொழி பேசுவோர் எண்ணிக்கை :663 மில்லியன்
வேற்று மொழி பேசுவோ எண்ணிக்கை தான் அதிகம் , ஆக இந்தியை தேசியமொழியாக்கினால் இங்கே இருக்கும் அத்தனை மக்களும்
அது ஒரு தேவையற்ற சுமையாகத்தான் இருக்கும்.
663 மில்லியன் மக்களும் தங்கள் தாய் மொழி,ஹிந்தி மொழி,ஆங்கிலம் இம்முன்று மொழிகளை கற்றவேண்டிய சூழல் தேவையற்றது ,பலனுமற்றது.
ஆகையால் நமது திறன் தேவையற்ற வழிகளில் விரயம் செய்யபடுகிறது.
குறிப்பு : மற்ற மொழிகளை கற்றக்ககூடாது என்று கூறமுற்படவில்லை , திணிப்பு
தவறு என்று தான் சொல்லவிளைகிறேன்.தேவையிருப்பின்,விருப்பமிருப்பின் யார் வேண்டுமானுலும் யார் மொழியையும் கற்றுக்கொள்ளலாம்.
ஹிந்தி மேல் வெறுப்பா ?
கண்டிப்பாக இல்லை , நம்மை(தமிழர்கள்) பொருத்தவரை ஹிந்தி என்பது ஜெர்மன்,சைனிஸ்,மராத்தி போன்ற மற்ற மொழி அவ்வளவே.
தேசிய மொழி ஹிந்தியாக இருந்தால் வணிகம் மற்றும் இதர பணிகளுக்கு ஏதுவாக இருக்கும் ??
பில்கேட்ஸின் மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் பல இடங்களில் உள்ளது, ஆனால் பில்கேட்ஸ்க்கு ஹிந்தி தெரியாதே.
டாடா,ரிலையன்ஸ் தமிழ்நாட்டில் மற்றும் எனைய மாநிலங்களில் வணிகம் செய்கின்றனர் , அவர்களுக்கு தமிழ் தெரியாதே.
ஆகையால் விருப்பம் இருப்பின் தனிநபர் பயன்பாடு கருதி அவர்கள் கற்றுக்கொள்ளட்டுமே.
மற்றொன்று சொல்ல ஆசைப்படுகிறேன் , இந்தியா முழுவதும் ஒரே மதம் நிறுவி அனைவரையும் அந்த மதக்கோட்பாடுகளை பின்பற்ற செய்யலாமா ?
இதை செய்வதன் மூலம் எல்லோரும் ஒர் மதம் ஆகிவிடுவர் , மதசண்டனைகள் இருக்காது ? செய்யமுடியுமா ? நம்மால் ? மிருகத்தமாக தோன்றுகிறது அல்லவா அதேப்போல தான் மொழியை திணிப்பதும் .
ஹிந்தி தான் இந்தியாவின் தேசியமொழி என்று நானும் இந்த 65% நண்பர்களைப் போலத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன்.
என்னை தெளிவுப்பெறச்செய்யத தளங்கள்
1. மூத்தமிழ் மன்றம்
2. தமிழ் மன்றம்
முடிவுரை :
நண்பர்களே , எந்த மொழியையும் குறைத்துக்கூறமுற்படவில்லை, நாம் நம் செம்மொழியாகிய தமிழ் மொழியை வழக்கில் வைக்க அதற்கு முக்கியத்துவம் நாம் அன்றி வேறு யாரும் கொடுக்கமுடியாதல்லா.தமிழர் தழிழர் உரையாட தழிழை பயன்படுத்துவோம் அவ்வளவே.
இதேப்போல நீங்களு உங்களை சூழ்ந்துள்ள நண்பர்களிடம் முறையாக கூறி விளக்குவீர் நமது மொழிக்கும் முக்கியத்துவம் கொடுப்போம்.
நன்றி தோழர் தோழிகளே.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நமது நாட்டின் தேசிய மொழி எது என்ற வாக்கெடுப்பில் தொடங்கி இன்று வரை பதிந்த வாக்குகள்.
மொத்தம் = 23 ஓட்டுகள்
தமிழ் = 8%
ஹிந்தி = 65 %
சமஸ்கிருதம் = 0%
ஒரு தனிப்பட்ட மொழிக்கும் இந்த அந்தஸ்த்து இல்லை = 26 %
இந்த கட்டுரையை நான் கண்மூடித்தனமாகவோ வெறித்தனமாகவோ எழுத முற்ப்படவில்லை.
65 % நமது தமிழ் நண்பர்கள் தெளிவுப்பெறசெய்வதற்கான சிறு முயற்சி.
மொழி
மொழி என்பது மனிதனின் கண்டுபிடிப்புகளிலே மிகவும் அரிதான உன்னத கண்டுபிடிப்பு.
மனிதனின் வாழ்க்கைமுறை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை தெரிந்துக்கொள்ள உதவும் உன்னத சாவி.
அறிவாற்றல்,சிந்தனை,உணர்வுகளை சேமித்து அடுத்த சங்கதிக்கு கொண்டுச்செல்லும் பொக்கிஷம்.
நன்றி : ஆபத்தில் இருக்கும் மொழிகளின் ஆய்வுக்கட்டுரை அக்டோபர் 2000 (நமது செம்மொழி தமிழும் இதில் அடங்கும்)
1. இந்தியாவின் தேசிய மொழி எது ?
இந்தியா(Liberal Democracy, Unity in Diversity) சமய சார்ப்பற்ற மொழிபேதமற்ற பல தரப்பட்ட இனமக்கள் வாழ்கிற நாடு.இனம் என்றால் அதற்கேன தனிப்பட்ட கலாச்சாரம்,மொழி...என்று இருக்குமல்லவா!
இந்தியாவின் பலமே இது தான் வெவ்வேறு இன மத மக்கள் ஒருகினைந்து வாழ்தல்,
நாம் நம் சக மனிதர்களின் உணர்வுகளுக்கு மதிப்பும் மரியாதையும் அளிப்பவர்கள் தானே.
ஆகையால் எப்படி நாம் ஒரு தனிப்பட்ட மொழிக்கு
பொருந்தா அங்கிகாரத்தை கொடுப்போம், நமது சட்டமும் சொல்லவில்லை இன்ன மொழி தான் தேசியமொழி என்று,உங்களுக்கு சந்தேகம் இருப்பின்
இந்தியாவின் அலுவலக மொழிகள் வலைத்தளத்திற்கு சென்றுப்பார்த்தால் விளங்கும்,
2. ஏன் ஹிந்தி இந்தியாவின் தேசியமொழியாக இருக்ககூடாதா ?
இந்த கேள்விக்கான காரணமே தவறான புரிதலின் அடிப்படையிலானது.
என்ன அடிப்படை ?
ஹிந்தி என்கிற ஒரே மொழி தான் வட இந்தியா முழுவது பேசப்படுகிறது, சத்தியமாக இல்லை , மேலும் பாலிஉட் ஹிந்தி கனவு தொழிற்சாலையும் ஒரு மறைமுக காரணம்.
புள்ளிவிவப்படி அதாவது உண்மையான நிலை
இந்தியாவின் மொத்த மக்கள் தொகை = 1 பில்லியன்...
ஹிந்தி பேசுவோர் எண்ணிக்கை : 337 மில்லியன்
வேற்று மொழி பேசுவோர் எண்ணிக்கை :663 மில்லியன்
வேற்று மொழி பேசுவோ எண்ணிக்கை தான் அதிகம் , ஆக இந்தியை தேசியமொழியாக்கினால் இங்கே இருக்கும் அத்தனை மக்களும்
அது ஒரு தேவையற்ற சுமையாகத்தான் இருக்கும்.
663 மில்லியன் மக்களும் தங்கள் தாய் மொழி,ஹிந்தி மொழி,ஆங்கிலம் இம்முன்று மொழிகளை கற்றவேண்டிய சூழல் தேவையற்றது ,பலனுமற்றது.
ஆகையால் நமது திறன் தேவையற்ற வழிகளில் விரயம் செய்யபடுகிறது.
குறிப்பு : மற்ற மொழிகளை கற்றக்ககூடாது என்று கூறமுற்படவில்லை , திணிப்பு
தவறு என்று தான் சொல்லவிளைகிறேன்.தேவையிருப்பின்,விருப்பமிருப்பின் யார் வேண்டுமானுலும் யார் மொழியையும் கற்றுக்கொள்ளலாம்.
ஹிந்தி மேல் வெறுப்பா ?
கண்டிப்பாக இல்லை , நம்மை(தமிழர்கள்) பொருத்தவரை ஹிந்தி என்பது ஜெர்மன்,சைனிஸ்,மராத்தி போன்ற மற்ற மொழி அவ்வளவே.
தேசிய மொழி ஹிந்தியாக இருந்தால் வணிகம் மற்றும் இதர பணிகளுக்கு ஏதுவாக இருக்கும் ??
பில்கேட்ஸின் மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் பல இடங்களில் உள்ளது, ஆனால் பில்கேட்ஸ்க்கு ஹிந்தி தெரியாதே.
டாடா,ரிலையன்ஸ் தமிழ்நாட்டில் மற்றும் எனைய மாநிலங்களில் வணிகம் செய்கின்றனர் , அவர்களுக்கு தமிழ் தெரியாதே.
ஆகையால் விருப்பம் இருப்பின் தனிநபர் பயன்பாடு கருதி அவர்கள் கற்றுக்கொள்ளட்டுமே.
மற்றொன்று சொல்ல ஆசைப்படுகிறேன் , இந்தியா முழுவதும் ஒரே மதம் நிறுவி அனைவரையும் அந்த மதக்கோட்பாடுகளை பின்பற்ற செய்யலாமா ?
இதை செய்வதன் மூலம் எல்லோரும் ஒர் மதம் ஆகிவிடுவர் , மதசண்டனைகள் இருக்காது ? செய்யமுடியுமா ? நம்மால் ? மிருகத்தமாக தோன்றுகிறது அல்லவா அதேப்போல தான் மொழியை திணிப்பதும் .
ஹிந்தி தான் இந்தியாவின் தேசியமொழி என்று நானும் இந்த 65% நண்பர்களைப் போலத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன்.
என்னை தெளிவுப்பெறச்செய்யத தளங்கள்
1. மூத்தமிழ் மன்றம்
2. தமிழ் மன்றம்
முடிவுரை :
நண்பர்களே , எந்த மொழியையும் குறைத்துக்கூறமுற்படவில்லை, நாம் நம் செம்மொழியாகிய தமிழ் மொழியை வழக்கில் வைக்க அதற்கு முக்கியத்துவம் நாம் அன்றி வேறு யாரும் கொடுக்கமுடியாதல்லா.தமிழர் தழிழர் உரையாட தழிழை பயன்படுத்துவோம் அவ்வளவே.
இதேப்போல நீங்களு உங்களை சூழ்ந்துள்ள நண்பர்களிடம் முறையாக கூறி விளக்குவீர் நமது மொழிக்கும் முக்கியத்துவம் கொடுப்போம்.
நன்றி தோழர் தோழிகளே.
ஞாயிறு, 29 ஜூலை, 2007
ஆனந்தவிகடனில் - ஆர்குட்
பெயர்: ஆர்குட்
வயது: மூன்று
என்னைப் பற்றி: கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ‘ஆர்குட் புயுக்கோக்டென்’ ஜஸ்ட் ஜாலியாக என்னைக் கண்டு பிடித்தார்! இன்று எனக்கு உலகம் முழுவதும் 49 மில்லியன் நண்பர்கள்! உலகளவில் அதிகமாகப் பயன்படும் வலைத்தளங்களில் எட்டாவது இடம் எனக்கு. எல்லோரும் என்னில் இலவசமாக உலவலாம்... உங்கள் நண்பர்களைத் தேடிப் பிடிக்கலாம்!
மதம்: எம்மதமும் சம்மதம்!
மொழி: எழுத்து வடிவம் உள்ள எல்லா மொழிகளும்!
இங்கே எதற்காக: நட்பு, அரட்டை, கடலை, காமம், காமெடி, செய்தி, பாராட்டு, திட்டு என எதற்காகவும்...
முதலில் ப்ளஸ்கள்!
எந்தக் கண்டத்தில் இருந்தாலும், ஆர்குட்டில் இருந்தால் ஒற்றைப் பெயரை வைத்துக்கொண்டு விட்டுப்போன நண்பனைத் தேடிப் பிடிக்க முடிவது முக்கியமான ப்ளஸ். நம்மைப் போலவே எண்ணங்கள் கொண்டவர்களுடன் புதிதாக நட்புகொள்ள முடிவது இரண்டாவது நன்மை!
சரி, மைனஸ்கள்..?
நம் ஆர்குட் ஆல்பத்தில் நாம் போட்டு வைத்திருக்கும் புகைப்படங்களை எவர் வேண்டுமானாலும் ‘டவுன்லோட்’ செய்து, அதைக்கொண்டு கிராஃபிக்ஸ் செய்து, சும்மா புகுந்து விளையாடலாம். நமக்கே தெரியாமல் நமது பெயரையும், புகைப்படங்களையும், விவரங்களையும் வைத்துக்கொண்டு அக்கவுன்ட் ஆரம்பித்து, சேட்டை பண்ணலாம். ஏன்... நம் அக்கவுன்ட்டையே ‘ஹேக்’ (கடத்தி!) செய்து, நமது நண்பர்களுக்கு ஆபாசமான, விபரீதமான செய்திகளை அனுப்பலாம். நமக்கும் மற்றவர்களுக்கும் இருக்கும் நட்பின் ஆழத்தையும் மூன்றாவது நபரால் எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும்.
இந்த நட்பு வெப்சைட் புண்ணியத்தால் பல முன்னாள் காதல்கள் (திருமணமான பின்னரும்கூட) ஆங்காங்கே மீண்டும் சேர (சோர?) ஆரம்பித்திருக்கின்றன. இரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளில் தேசப் பாதுகாப்பையும், கலாசாரப் பாதுகாப்பையும் காரணம் காட்டி ஆர்குட்டைத் தடை செய்திருக்கிறார்கள்.
தகவல் கடலாக விரிந்துகிடக்கும் ஆர்குட்டில், ‘ஏன் பூமியின் வெப்ப நிலை உயர்ந்துகொண்டே இருக் கிறது?’ என்று நிபுணர் கருத்துக்களை ஆக்கபூர்வமாகக் கேட்டுத் தெரிந்து கொள்வதும், ‘பக்கார்டிக்கு எது பங்காளி பெஸ்ட் மிக்ஸிங்?’ என்று குடிமகன் கருத்தை அறிந்துகொள்வதும் அவரவர் இஷ்டம்!
மொத்தத்தில், ஆர்குட் கைப்பிடி இல்லாத கத்தி! பார்த்து, பத்திரமா, பாதுகாப்பா பயன்படுத்திக்கோங்க!- -
நன்றி : ஆனந்தவிகடன்
வயது: மூன்று
என்னைப் பற்றி: கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ‘ஆர்குட் புயுக்கோக்டென்’ ஜஸ்ட் ஜாலியாக என்னைக் கண்டு பிடித்தார்! இன்று எனக்கு உலகம் முழுவதும் 49 மில்லியன் நண்பர்கள்! உலகளவில் அதிகமாகப் பயன்படும் வலைத்தளங்களில் எட்டாவது இடம் எனக்கு. எல்லோரும் என்னில் இலவசமாக உலவலாம்... உங்கள் நண்பர்களைத் தேடிப் பிடிக்கலாம்!
மதம்: எம்மதமும் சம்மதம்!
மொழி: எழுத்து வடிவம் உள்ள எல்லா மொழிகளும்!
இங்கே எதற்காக: நட்பு, அரட்டை, கடலை, காமம், காமெடி, செய்தி, பாராட்டு, திட்டு என எதற்காகவும்...
முதலில் ப்ளஸ்கள்!
எந்தக் கண்டத்தில் இருந்தாலும், ஆர்குட்டில் இருந்தால் ஒற்றைப் பெயரை வைத்துக்கொண்டு விட்டுப்போன நண்பனைத் தேடிப் பிடிக்க முடிவது முக்கியமான ப்ளஸ். நம்மைப் போலவே எண்ணங்கள் கொண்டவர்களுடன் புதிதாக நட்புகொள்ள முடிவது இரண்டாவது நன்மை!
சரி, மைனஸ்கள்..?
நம் ஆர்குட் ஆல்பத்தில் நாம் போட்டு வைத்திருக்கும் புகைப்படங்களை எவர் வேண்டுமானாலும் ‘டவுன்லோட்’ செய்து, அதைக்கொண்டு கிராஃபிக்ஸ் செய்து, சும்மா புகுந்து விளையாடலாம். நமக்கே தெரியாமல் நமது பெயரையும், புகைப்படங்களையும், விவரங்களையும் வைத்துக்கொண்டு அக்கவுன்ட் ஆரம்பித்து, சேட்டை பண்ணலாம். ஏன்... நம் அக்கவுன்ட்டையே ‘ஹேக்’ (கடத்தி!) செய்து, நமது நண்பர்களுக்கு ஆபாசமான, விபரீதமான செய்திகளை அனுப்பலாம். நமக்கும் மற்றவர்களுக்கும் இருக்கும் நட்பின் ஆழத்தையும் மூன்றாவது நபரால் எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும்.
இந்த நட்பு வெப்சைட் புண்ணியத்தால் பல முன்னாள் காதல்கள் (திருமணமான பின்னரும்கூட) ஆங்காங்கே மீண்டும் சேர (சோர?) ஆரம்பித்திருக்கின்றன. இரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளில் தேசப் பாதுகாப்பையும், கலாசாரப் பாதுகாப்பையும் காரணம் காட்டி ஆர்குட்டைத் தடை செய்திருக்கிறார்கள்.
தகவல் கடலாக விரிந்துகிடக்கும் ஆர்குட்டில், ‘ஏன் பூமியின் வெப்ப நிலை உயர்ந்துகொண்டே இருக் கிறது?’ என்று நிபுணர் கருத்துக்களை ஆக்கபூர்வமாகக் கேட்டுத் தெரிந்து கொள்வதும், ‘பக்கார்டிக்கு எது பங்காளி பெஸ்ட் மிக்ஸிங்?’ என்று குடிமகன் கருத்தை அறிந்துகொள்வதும் அவரவர் இஷ்டம்!
மொத்தத்தில், ஆர்குட் கைப்பிடி இல்லாத கத்தி! பார்த்து, பத்திரமா, பாதுகாப்பா பயன்படுத்திக்கோங்க!- -
நன்றி : ஆனந்தவிகடன்
திங்கள், 16 ஜூலை, 2007
கதம்பம் 16 - July - 2007
வாழ்க்கையின் நோக்கமே மகிழ்ச்சியாய் இருப்பது. நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் மகிழ வைப்பது. உலகம் முழுவதையுமே புன்னகைப் பூக்களால் நிரப்புவது."
இன்று படிப்பு ஒரு பதட்டம்.
தேர்வு ஒரு பதட்டம்.
பள்ளிக்குச் செல்லுதல் ஒரு பதட்டம்.
மதிப்பெண்கள் வரும்போது மனம் எல்லாம் நடுக்கம்.
….
எதிலும் பதட்டம் எங்கும் பதட்டம்….
நாம் ஒவ்வொரு நிமிடமும் பதட்டத்துடனே அமர்ந்து இருக்கிறோம். திட்டமிட்டு வாழ்ந்தால் குழப்பமும் இல்லை. நடுக்கமும் இல்லை.
நகைச்சுவை என்பது பதட்டத்தைக் குறைக்கும். அது உற்சாகத்தை அதிகப்படுத்தும். தினமும் சிரிக்கத் தகுந்த செய்திகளை நாம் வாசிக்க வேண்டும். அதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
ஒரு நிமிடம் சிரிப்பது ஒரு மணிநேர உடற்பயிற்சிக்குச் சமம். சிரிப்பது மூளையை இலகுவாக்கும். இதயத்தை வலுவாக்கும். நரம்புகளை முறுக்கேற்றும். காற்று போல் உடலைக் கனமிழக்கச் செய்யும். நுண்ணறிவைச் செம்மையாக்க சிரிப்பது ஓர் உபாயம்.
மகத்தான மனிதர்கள் எல்லோருமே நகைச்சுவை உணர்வுடன் வாழ்ந்தவர்கள் தான்.
ஹென்றி வார்ட் பீச்சர் என்கிற பேச் சாளர் மேடையில் பேசிக்கொண்டிருந்த போது, ஒரு துண்டுக் காகிதம் அவரைத் தேடி வந்தது. அதில் ‘முட்டாள்’ என்று எழுதியிருந்தது. உடனே பீச்சர், ‘‘யாரோ தன் பெயரை மட்டும் அனுப்பியிருக்கிறார்கள்’’ என்று அறிவித்தார்.
புத்திக்கூர்மை உள்ளவர்கள் வசவுகளைக்கூட வாழ்த்து களாக மாற்றிக் கொள்வார்கள்.
பெர்னாட்ஷாவும், செஸ்டர் டன்னும் நெருங்கிய நண்பர்கள். செஸ்டர்டன் பருமனானவர். ஷா ஒல்லியானவர். இருவரும் ஒரு முறை தங்கள் தோற்றத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந் தனர். அப்போது செஸ்டர்டன் ‘‘உங்களைப் பார்ப்பவர்கள் நம் நாட்டில் ஏதோ பஞ்சம் இருக்கிறது என்று நினைத்துக் கொள்வார்கள்’’ என்று ஷாவிடம் சொன்னார். அதற்கு, ‘‘உங்களைப் பார்த்ததும் அதற்கு யார் காரணம் என்று கண்டுகொள்வார்கள்’’ என்று மின்னல் வேகத்தில் பதிலடி கொடுத்தார் ஷா.
நகைச்சுவை உணர்வு கசப்பைப் போக்கிக் களைப்பை நீக்கி புத்துணர்வு தரும். இன்று முதல், தினம் ஒரு நகைச்சுவையைப் படித்துப் பகிர்ந்து பலனடைவோம்.
நன்றி : சுட்டி விகடன் , வெ.இறையன்பு I.A.S
இன்று படிப்பு ஒரு பதட்டம்.
தேர்வு ஒரு பதட்டம்.
பள்ளிக்குச் செல்லுதல் ஒரு பதட்டம்.
மதிப்பெண்கள் வரும்போது மனம் எல்லாம் நடுக்கம்.
….
எதிலும் பதட்டம் எங்கும் பதட்டம்….
நாம் ஒவ்வொரு நிமிடமும் பதட்டத்துடனே அமர்ந்து இருக்கிறோம். திட்டமிட்டு வாழ்ந்தால் குழப்பமும் இல்லை. நடுக்கமும் இல்லை.
நகைச்சுவை என்பது பதட்டத்தைக் குறைக்கும். அது உற்சாகத்தை அதிகப்படுத்தும். தினமும் சிரிக்கத் தகுந்த செய்திகளை நாம் வாசிக்க வேண்டும். அதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
ஒரு நிமிடம் சிரிப்பது ஒரு மணிநேர உடற்பயிற்சிக்குச் சமம். சிரிப்பது மூளையை இலகுவாக்கும். இதயத்தை வலுவாக்கும். நரம்புகளை முறுக்கேற்றும். காற்று போல் உடலைக் கனமிழக்கச் செய்யும். நுண்ணறிவைச் செம்மையாக்க சிரிப்பது ஓர் உபாயம்.
மகத்தான மனிதர்கள் எல்லோருமே நகைச்சுவை உணர்வுடன் வாழ்ந்தவர்கள் தான்.
ஹென்றி வார்ட் பீச்சர் என்கிற பேச் சாளர் மேடையில் பேசிக்கொண்டிருந்த போது, ஒரு துண்டுக் காகிதம் அவரைத் தேடி வந்தது. அதில் ‘முட்டாள்’ என்று எழுதியிருந்தது. உடனே பீச்சர், ‘‘யாரோ தன் பெயரை மட்டும் அனுப்பியிருக்கிறார்கள்’’ என்று அறிவித்தார்.
புத்திக்கூர்மை உள்ளவர்கள் வசவுகளைக்கூட வாழ்த்து களாக மாற்றிக் கொள்வார்கள்.
பெர்னாட்ஷாவும், செஸ்டர் டன்னும் நெருங்கிய நண்பர்கள். செஸ்டர்டன் பருமனானவர். ஷா ஒல்லியானவர். இருவரும் ஒரு முறை தங்கள் தோற்றத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந் தனர். அப்போது செஸ்டர்டன் ‘‘உங்களைப் பார்ப்பவர்கள் நம் நாட்டில் ஏதோ பஞ்சம் இருக்கிறது என்று நினைத்துக் கொள்வார்கள்’’ என்று ஷாவிடம் சொன்னார். அதற்கு, ‘‘உங்களைப் பார்த்ததும் அதற்கு யார் காரணம் என்று கண்டுகொள்வார்கள்’’ என்று மின்னல் வேகத்தில் பதிலடி கொடுத்தார் ஷா.
நகைச்சுவை உணர்வு கசப்பைப் போக்கிக் களைப்பை நீக்கி புத்துணர்வு தரும். இன்று முதல், தினம் ஒரு நகைச்சுவையைப் படித்துப் பகிர்ந்து பலனடைவோம்.
நன்றி : சுட்டி விகடன் , வெ.இறையன்பு I.A.S
ஞாயிறு, 1 ஜூலை, 2007
உயில் என்றால்.....

உயில் என்றால் என்ன?
ஒருவர், தான் சம்பாதித்த சொத்துகளை, தன் இறப்புக்குப் பிறகு, தான் விரும்பும் நபர் அல்லது நபர்களுக்கு, எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் போய்ச் சேர்வதற்கு, சுய நினைவுடன் எழுதி வைக்கும் முக்கிய ஆவணம்தான் உயில் (விருப்ப ஆவணம்).
உயில் என்பதே உறவுகளைச் சிதறவிடாமல் பார்த்துக்கொள்ளும் கவசம்தான். அதைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கும் குடும்பங்களில் எந்தச் சிக்கலும் வருவதில்லை.
உயில் என்பது சொத்தைப் பிரிப்பதற்கும், பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் மட்டும் எழுதப்படும் ஆவணம் அல்ல. உயில் எழுதுபவரின் மனநிலை, ஆசை, விருப்பம், பிறரின் மேல் உள்ள அன்பு போன்ற உள்ளுணர்வுகளையும் விளக்கும் உணர்வுப்பூர்வமான சாதனம் அது!
இருப்பது கையளவு சொத்துதான் என்றாலும் எதிர்காலத்தில் யாரும் அதற்காகச் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது. எனவே, முறையாக உயில் எழுதி வையுங்கள்!
உயில் --- கட்டாயம் என்ன ?
உயில் எழுதியே ஆகவேண்டும் என்பது கட்டாயமில்லை. ஆனால், எழுதாவிட்டால் சிக்கல் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்ப-தால் எழுதிவிடுவது நல்லது.
‘‘தன்னுடைய மரணத்துக்குப் பிறகு சொத்தின் உரிமை குறித்து பிரச்னை ஏற்படலாம் என்று குடும்பத்தின் சூழ்நிலையை நன்கு அறிந்த குடும்பத் தலைவர் கருதினால், சிறு சொத்துகளுக்குக் கூட உயில் எழுதலாம். ஆனால், பரம்பரையாக அவருக்குக் கிடைத்த சொத்துகள் குறித்து உயில் எழுத முடியாது. பாட்டன் சொத்து பேரனுக்கு என்ற அடிப்படையில் அது குடும்ப வாரிசுகளுக்குத்தான் போய்ச் சேரும்’’ என்றார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரிஷிகேஷ் ராஜா.
உயில் - எப்படி எழுதுவது?
‘‘உயில் எழுதுவது மிகவும் எளிமையான நடைமுறைதான். முத்திரைத்தாளில்தான் எழுத வேண்டும் என்ற கட்டாயமில்லை. சாதாரண வெள்ளை பேப்பரில்கூட எழுதலாம். எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதலாம். கையால் எழுதுவது நல்லது. வழக்கறிஞர் முன்னிலையில்தான் எழுதவேண்டும் என்ற அவசியம் இல்லை.
உயில் எழுதும்போது அடிப்படையாக சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அதன் நம்பகத்தன்மைக்காக குறைந்தபட்சம் இரண்டு சாட்சிகள் தேவை. உயிலில் ஒவ்வொரு பக்கத்திலும் அவர்களின் கையெழுத்து இருக்க வேண்டும். சாட்சிகள் வாரிசாக இருக்கக் கூடாது. அவர்களுடைய நிரந்தர முகவரியைக் குறிப்பிட வேண்டும்.
உயில் எழுதும்போது, சொத்துகள் பற்றிய விவரங்களை மிகத் தெளிவாக எழுத வேண்டும். அதில், முக்கியமாக சொத்தின் வாரிசுகள் யார் என்பதை விவரமாகவும், அவர்கள் ஏன் வாரிசுகளாக அறிவிக்கப்படுகிறார்கள் என்கிற காரணத்தையும் விரிவாக எழுத வேண்டும்’’
உதாரணமாக
எனது மகள் பத்மாவுக்குத் தேவையான அனைத்தையும், அவளது கல்யாணத்தின் போதே நகை, சீர்வரிசை, பணம் போன்றவற்றின் மூலம் கொடுத்து விட்டதால், அவளுக்கு நான் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை. என் மூத்த மகன் ரவியும் அவனது மனைவியும் பல ஆண்டுகளாக என்னைச் சரியாகக் கவனித்துக் கொள்ளவில்லை. அவனை விட்டுப் பிரிந்து எனது இளைய மகன் ரமேஷ் வீட்டுக்குச் சென்றேன். கடந்த 10 ஆண்டுகளாக ரமேஷ் என்னை நன்றாகக் கவனித்துக் கொண்டான். எனவே, ரமேஷை என் வாரிசாக அறிவிக்கிறேன். நான் இந்தியன் வங்கியில் வாங்கிய 2 லட்ச ரூபாய் கடன் இன்னமும் முழுவதும் திருப்பிக் கட்டவில்லை. நான் சொந்தமாகச் சம்பாதித்து அண்ணா நகரில் கட்டிய வீட்டை விற்று, வங்கிக் கடனை அடைத்துவிட்டு மீதம் இருப்பவற்றை ரமேஷிடம் கொடுக்க வேண்டும். மேற்கூறப்பட்ட விஷயங்கள் என் குடும்ப நண்பர் ராமமூர்த்தியின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்’ என்கிற ரீதியில் தெளிவாக எழுதலாம்.
----
‘‘சொத்து பற்றிய விவரங்களைக் குறிப்பிடும்போது, அவை எங்கு உள்ளன, எவ்வளவு பரப்பு என்பதையும் விரிவாக எழுத வேண்டும். வீடு, மனை, தோட்டம், வங்கிச் சேமிப்பு, பங்கு பத்திரங்கள் போன்ற தகவல்-களைத் தெரிவிக்கும்போது, அவற்றின் சான்றிதழ்கள் மற்றும் பத்திரங்கள் பாதுகாப்பாக உள்ள இடத்தையும் குறிப்பிட வேண்டும்’’ என்றும் சொன்னார்.
உயிலில் தோன்றக் கூடிய சிக்கல்கள் பற்றிப் பேசிய சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் வெங்கடேஷ், ‘‘உயிலைப் பதிவு செய்வது கட்டாயமில்லை. இருந்தாலும், இரண்டு சாட்சிகளோடு, சார் பதிவாளர் முன்னிலையில் உயிலைப் பதிவு செய்வதால் அதற்கு சட்டரீதியான அங்கீகாரம் கிடைக்கும். பதிவுக்கான மொத்தச் செலவு 600 ரூபாய்தான்!’’ என்றார்.
உயில் அமல்படுத்து-நராக ஒருவரை நியமிப்-பது அவசி-யம். உயிலில் குறிப்பிடப்-பட்டுள்ள விஷயங்கள் சரியாக நடைபெறுகிறதா என்பதை மேற்பார்-வையிடும் பொறுப்பு அவருக்கு இருக்கிறது. குடும்ப நண்பர்கள், வக்கீல்கள் போன்றவர்-களை உயில் அமல்படுத்-துபவராக நியமிக்கலாம். அவரே சொத்தைப் பிரித்து கொடுப்பதற்கும், கடன்கள் இருந்தால் அதனை அடைப்பதற்கும் பொறுப்பு ஏற்கிறார்.
• நம் நாட்டில் உயிலில் இரு முக்கியப் பிரிவுகள் உண்டு. ஒன்று, இந்து சட்டத்துக்கு உட்பட்ட உயில். மற்றொன்று, முஸ்லிம் சட்டத்துக்கு உட்பட்ட உயில். முஸ்லிம் தனிநபர் சட்டப்படி, ஒரு முஸ்லிம், தன் உயிலில் தான் சுயமாகச் சம்பாதித்த சொத்தில் 2/3 பகுதியைக் கட்டாயமாக தனது வாரிசுகளுக்குக் கொடுக்க வேண்டும். மீதம் உள்ள 1/3 பகுதியை மட்டுமே தன் விருப்பப்படி பிறருக்கு உரிமை வழங்கி உயில் எழுத முடியும்.
• உயில் மூலம் கிடைக்கும் சொத்துக்கு மூலதன ஆதாய வரி கிடையாது.
உயில்கள் பலவிதம்!
குறிப்பிட்ட விஷயங்களை நிறைவேற்றினால் மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிபந்தனைக்கு உட்பட்ட உயில், கணவன், மனைவியோ அல்லது வேறு இருவரோ அதற்கு மேற்பட்டவர்களோ எழுதும் கூட்டு உயில், போர்க்களத்தில் உள்ள ராணுவ வீரர்களுக்கான சலுகைக்கு உட்பட்ட உயில் போன்ற பலவகையான உயில்கள் உள்ளன. இதில், சலுகை உயிலுக்கு, சாட்சியாக ஒருவர் கையெழுத்துப் போட்டால் போதும்.
உயில் எப்போது செல்லாமல் போகும்?
குடிபோதையில் அல்லது மனநிலை சரியில்லாத நிலையில் எழுதிய உயில் சட்டப்படி செல்லுபடி ஆகாது. மேலும் மைனர்கள் எழுதும் உயிலுக்கும் மதிப்பு இல்லை.
சில டெக்னிக்கலான வார்த்தைகள்!
Will உயில் (விருப்ப ஆவணம்)
Testator உயில் எழுதியவர்
Executor உயில் அமல்படுத்துநர்
Codicil இணைப்புத் தாள்கள்
Attested சரிபார்க்கப்பட்டது.
Probate
நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் சட்டப்படி, உயிலை செல்லுபடியாக்கல்.
Beneficiary, Legatee வாரிசு
Intestate உயில் எழுதாமல் இறந்து போனவர்
Succession Certificate வாரிசு சான்றிதழ்
Hindu Succession Act இந்து வாரிசு உரிமைச் சட்டம்
Muslim personal Act முஸ்லிம் தனிநபர் சட்டம்
Guardian முஸ்லிம் தனிநபர் சட்டம்
Witness சாட்சி
‘ஆன் லைன்’ உயில்
உயில் எழுதுவதன் முக்கியத்துவம் வெளிநாடுகளில் மிக அதிகமாகப் பரவியுள்ளது. தற்போது இன்டர்நெட்டின் மூலமாக உயில் எழுதும் முறைகூட வந்துவிட்டது. ஒரு வழக்கறிஞர், உயில் எழுத விரும்புவரிடம் இன்டர்நெட் மூலம் கலந்துரையாடல் நடத்துவார். அதன்பின்னர், உயிலை எழுதி விடலாம். 24 மணி நேரத்துக்குள் அந்த உயில் பதிவு செய்யப்பட்டுவிடும். இந்தியாவில் இந்த வசதி இன்னும் வரவில்லை.
நன்றி : நாணயவிகடன்.
வியாழன், 28 ஜூன், 2007
சைனாகார்களின் புதிய மொபைல் போன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)