செவ்வாய், 29 ஜனவரி, 2008

கடந்த சில மாதங்களில்(2007-2008) ஊடகங்கள் மூலம் பெறப்பட்ட செய்திகளில் என்னை பாதித்த சில நிகழ்வுகளைப்பற்றி இன்றைய கதம்பத்தில் உரையாடுவோம்.

1. வரதட்சணை கொடுமையால் அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பட்ட மருமகள்

2. நிர்வாண பூசை சாமியார் கைது 2 பெண்கள் கொலை

3. டாக்டராக இருக்கும் கணவனிடம் டாக்டாராக இருக்கும் மனைவி படும் மனவுளைச்சல்

இதுனால எனக்கு என்ன ? நல்ல சம்பளம் நல்ல வேலை நமக்கு எதுக்கு இந்த தேவையில்லாத சிந்தனை.நாம் நம்ம வேலைய பாத்துட்டு போகலாமே.ஏய் என்னது இது ! ... அப்படியெல்லாம் விட்டுடு போக கூடாது அது தப்பு (வடிவேலு தோரணையா தெரியுதா :) நமக்காக இலைனாலும் நமது சங்கதியினருக்காக நாம் நல்ல புரிதல் கொண்ட சமுதாயத்தை படைக்க வேண்டாமா ?

இந்த அடிப்படை மனமாற்றம் வேண்டுமுனு சொல்றேன். அதை சொல்ல நான் யார் , ஆன்மிக குரு வா ? இல்லை கார்பிரேட் குருவா ? இல்லை நாமும் நம்மை சுற்றி இருப்பவர்களும் நல்லா இருக்கனுமுனு நினைக்கறவுங்களில் ஒருவன்(கொஞ்டம் பில்டப் ஒவராகிடுச்சோ !) ,

இதை பொதுநல நோக்கோடு பார்க்காமல் ,நாளைக்கு இதேப்போல் நமது குடும்பத்தில் நடக்காமல் இருக்க தவிர்க்கும் நடவேடிக்கையாகக்கூடப்பார்க்கலாம்.

கண்ணும் மனசும் சங்கடப்படும் போது பார்த்துட்டு சும்மா போக நான் கல்லோ மண்ணோ கிடையாது.

அதற்கு மேல் ஒன்றும் தேவையில்லை இந்த மாதிரி செய்திகளை பகிற.

தாழ்த்தப்பட்ட மக்களை தனது அதிக்காரப்பிடியில் வைத்திருக்கும் வக்கிரம் மிகுந்த மக்கள் மாதிரி தான் சில ஆண்களின் செயல்பாடு.படித்தவன் படிக்காதவன் என்று பேதமில்லை , பெற்ற கல்விக்கும் நடக்கும் நடத்தைக்கும் சம்பந்தமில்லை என்று நம்பும் படி தான் இருக்கு.அப்புறம் படிக்கிறது காசு பணம் சம்ப்பாதிக்க மட்டும் தானே , அப்புறம் எதுக்கு இவுனுங்களுக்கு சமுதாயத்தில் அந்தஸ்து வேண்டிக்கடக்கு.

பெண்ணை ஆணாக உருவகப்படுத்தினால் அது வீரத்தனம் ஆனால் ஆண்னை பெண்ணாக உருவக்கப்படுத்தினால் அது கேழைத்தனம் பேடித்தனம் என்ன மூட்டாள்தனமான உருவகம், இந்த மாதிரி சின்ன சின்ன தப்பான புரிதல்கள் மெல்ல மெல்ல தப்பான அவிப்பிராயத்தை நமது மனதில் விதைத்து நாளை நமது செயல்பாடுகளில் நியாயம் காணுகிறது.திரும்ப திரும்ப பொய் உரைப்பதானால் அதனை உண்மையாக்கலாம் என்கிற ஹிட்லரின் யுக்தியைப்போல் தெரிந்தும் தெரியாமலும் நாம் செய்துக்கொண்டிருக்கிறோம்.

தாலிக்கட்ட தலையை கூனியும் பெண், கடைசி வரை அவனுக்கு அடிமை என்கிற உணர்வு எழுத்தப்படாத,சொல்லப்படாத சட்டமாக நமது சமுகத்தில் பரவியுள்ளது.

நான் தலைவன் எனக்கென்று ஒரு சில மடத்தனமான கோட்ப்பாடுகளும் கொள்கைகள் இருக்கலாம்.ஆனால் தலைவிக்கு அதெல்லாம் கிடையாது கூடாது.தலைவன் - தலைவி எனப்பது தானே அகப்பொருள். தலைவன் - சேவகி என்பதல்ல

கற்பனையும் கவிதையும் பாரட்ட தெரிந்தவன், நிஜமான நிகழ்வை ஏன் ரசிக்க கூட தயங்குக்கிறான். முரண்பாடு , முற்றிலும் முரண்பாடு.

அவளுக்கும் நம்மைப்போல உயிரும் உணருவும் இருக்கு என்கிற மனோபாவம் ஏன் இன்னும் நமக்கு புரிவதில்லை.
மனைவி மட்டும் தாயாய், தங்கையாய்,தோழியாய்,சேவகியாய்,கட்டிலிலே பரத்தையாய் இருக்கவேண்டும் என்று சொல்லும் நாம் ஒரு கணவன் மட்டும் ராமன் என்கிறவனுக்கு உருவகப்படுத்தி அவன் செய்யும் செயலை சந்தேகத்தீயில் தாரைவார்த்து நீயாப்படுத்துகிறோம்.
கடவுளை இழிவுப்படுத்துவது எனது நோக்கமல்ல அது என் தேவையுமில்லை.


சரி என்ன பண்ணலாம் , !

சிந்திக்க ஆரம்பிப்போம் எல்லோருக்கும் தன்மானம்,சுயகவுருவம் இருக்கும் என்பதை உணர்ந்து.

2 கருத்துகள்:

Chandravathanaa சொன்னது…

நல்ல சிந்தனை.

கேசுவர் சொன்னது…

நன்றி சந்திரவதனா, நான் உங்கள் சினிமா பாடல்கள் பிளாக்கை பார்த்துள்ளேன், நிறைய பாடல்கள் , அருமை.